கண்ணின் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

Sun, 15 Jan 2023-11:46 pm,

கருவளையங்கள் உங்கள் முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். இரசாயன அடிப்படையிலான மருந்துகளால் அவற்றை விரைவில் குணப்படுத்த முடியும் என்றாலும், முகத்தின் சருமங்கள் மிகவும் சென்ஸிடிவ் ஆனது என்பதால் வீட்டு வைத்தியம் மிகவும் சிறந்தது.

ஆரஞ்சு சாறு மூலம் கருவளையங்களையும் நீக்கலாம். ஆரஞ்சு சாறு மற்றும் கிளிசரின் சில துளிகள் பயன்படுத்துவதன் மூலம், கருவளையங்கள் படிப்படியாக குறையும். இது சருமத்திற்கு பொலிவையும் தருகிறது.

குளிர்ந்த பாலை பருத்தி துணியில் ஊறவைத்து, கண்களின் கருவளையத்தில் வைக்கவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

கருவளையங்களில் இருந்து விடுதலை ஒரு ஸ்பூன் தக்காளி சாற்றுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கண்களுக்கு அருகில் கருவளையங்கள் இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடத்திற்கு பின் தண்ணீரில் கழுவவும். 

பச்சை உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுக்கவும். சாற்றை ஒரு பருத்தி துணியில் நனைத்து, கண்களை மூடிக்கொண்டு கருமையான வட்டத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link