நினைத்ததை நிறைவேற்றும் முருகன்! கந்தனை சரணடைந்தால் போராட்ட வாழ்க்கையும் பொற்காலம் ஆகும்!

Mon, 09 Sep 2024-6:19 am,

முருகனை எப்படி வழிபட வேண்டும்? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. எப்படி வழிபட்டாலும், பக்தி என்ற மலர் கொண்டு அனுதினமும் அர்ச்சித்தால் முருகன் அருள் பொன் மழையாய் பொழிந்து வாழ்க்கையை பொற்காலம் என மாற்றும்

ஓம் சரவணபவ என்ற மந்திரம் ஒன்றே வினையறுக்கும். "கந்த சஷ்டி கவசம்" கவசமாய் இருந்து தீவினைகளை அறுத்து நன்மைகளைக் கொடுக்கும்

திருப்புகழை தினந்தோறும் ஓதித் துதித்தால், மனச்சாந்தியும், முருகனின் அருளும் கிடைக்கும்.

மாதாந்திர சஷ்டி விரதம் இருக்க வேண்டும், தீபாவளிக்கு பிறகு வரும் ஐப்பசி சஷ்டி மிகவும் விசேஷமானது சக்திவேல் கொண்டு அசுரனை அழித்த முருகனுக்கு சஷ்டி விரதம் மிகவும் பிடித்தமானது

முருகனின் வேல் சக்தியின் புனித சின்னமாகும். வீட்டில் வேல் வைத்து பூஜை செய்வது சிறந்தது. முருகனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வேல் வழிபாட்டின் போது முருகனின் ஸ்லோகங்கள் மற்றும் கந்த சஷ்டி கவசம் சொல்லலாம்

செவ்வாய் கிழமைகளில் முருகனை வழிபடுவது மிகவும் உகந்தது. செவ்வாய் கிரகத்திற்குக் அதிபதியான முருகனை அவருக்கு உரிய செவ்வாய்க்கிழமையன்று  வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். வீட்டில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தீய சக்திகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்

முருக வழிபாட்டில் விரதங்களைக் கடைப்பிடிப்பது என்பது மரபு, விரதங்கள் இருப்பதால் மனதும் உடலும் தூய்மையாகும்

புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்லும் போது முருகன் கோவில்களில் மாலையில் சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் செய்வது மிகவும் பலன் தரும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link