மெஸ்ஸிக்கு பயத்தை காட்டிய எம்பாப்பே; தோல்விக்கு பிறகு மைதானத்தில் கண்ணீர்

Mon, 19 Dec 2022-2:42 pm,

அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றாலும், அனைவரின் மனங்களையும் வென்றவர் எம்பாப்பே

 

உலகம் முழுவதும் இருக்கும் கால்பந்து ரசிகர்கள் மெஸ்ஸி கோப்பையை வெல்ல வேண்டும் என அர்ஜெண்டினாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், அந்த கோப்பையை எளிதாக எல்லாம் கொடுக்கமாட்டேன் என பம்பரமாக சுழன்று அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அர்ஜெண்டினாவை பயத்தை காட்டியவர் தான் இந்த எம்பாப்பே

இளம் வயது என்றாலும் கால்பந்தில் இப்போது அகில உலக சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். கூடுதல் நேரத்திலும் பிரான்ஸ் அணிக்காக கோல் அடித்து உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார். 

தனி ஒருவனாக ஒட்டுமொத்த பிரான்ஸ் அணிக்கும் நம்பிக்கை கொடுத்து விளையாடிய எம்பாப்பே, பெனால்டி ஷூட்டில் தோல்வியை எதிர்பார்க்கவில்லை.

போட்டி முடிந்ததும் மைதானத்திலேயே அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதார். அவரை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தேற்றினார்.  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link