சனியின் மாற்றம்: 3 மாதங்களுக்கு இந்த ராசிகளின் காட்டில் பண மழை

Sat, 22 Oct 2022-5:20 pm,

சனி பகவான் மகர ராசியில்தான் நிலை மாறவுள்ளார். தற்சமயம் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி நடந்துவருகிறது. எனினும், வக்ர நிலையிலிருந்து சனி பகவான் மாறியவுடன் இவர்கள் நிவாரணம் பெறுவார்கள். தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது நடைபெறும். பண வரவு பலமாக இருக்கும். நிதி பிரச்சனைகள் நீங்கும். இருப்பினும் முழுமையாக நிவாரணம் பெற எப்போதும் சனி பகவானின் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது. சனியின் சஞ்சாரத்தால் கும்ப ராசிக்காரர்களின் பிரச்சனைகள் நீங்கும். சுப பலன்களைப் பெறத் தொடங்குவார்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி இருக்கும்.

 

இந்த நேரத்தில் தனுசு ராசிக்காரர்களும் ஏழரை நாட்டு சனியின் பிடியில் உள்ளனர். அக்டோபர் 23-ம் தேதி முதல் சனியின் நேரடி சஞ்சாரம் அவர்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். தொழிலில் தடைப்பட்டிருந்த பணிகள் நடகும். பதவி உயர்வு இப்போது கிடைக்கும். வேலையில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

இந்த நேரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது. மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் இயக்க மாற்றத்தால் நிம்மதி கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பெரிய சாதனைகளை அடைய முடியும். தடைபட்ட வேலையை முடிக்க இது சரியான நேரம். பண வரவு சாதகமாக இருக்கும்.

 

துலாம் ராசிக்காரர்களுக்கும் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது. எனினும் சனியின் நிலை மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு பெரிய பலன்களை அளிக்கும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பெரிய வேலைகள் குடும்ப உறுப்பினர்களின் உதவியால் முடிவடையும். பல இடங்கலிலிருந்து பண வரவு இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link