பெற்றோர்கள் கவனத்திற்கு! குழந்தைகள் உங்களிடமிருந்து கொள்ளும் முக்கிய விஷயங்கள்!

Tue, 06 Aug 2024-9:54 am,

பெற்றோர்கள் குழந்தைகள் முன்பு கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் நிதானமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் கொண்டு செல்ல வேண்டும்.

 

பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி அணுகுகிறார்களோ, அப்படி தான் குழந்தைகள் மற்றவர்களிடம் அணுகுவார்கள். எனவே தொடர்பு திறன் நன்றாக இருக்க வேண்டும்.

 

ஒரு வேலையை எப்படி செய்ய வேண்டும் என்பதை குழந்தைகள் வீட்டில் இருந்து தான் கற்றுக்கொள்கின்றன. ஒரு செயலை எடுத்தால் செய்து முடிக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் தான் சொல்லி கொடுக்க வேண்டும். 

 

குழந்தைகளின் உணவுப் பழக்கம் பெற்றோர்களிடம் இருந்து தான் உருவாகிறது. எனவே வீட்டிலும், வெளியிலும் ஆரோக்கியமான உணவு முறைகளை சொல்லி கொடுக்க வேண்டும். 

 

சிறு வயது முதலே குழந்தைகளிடம் நிதி தொடர்பான அனைத்து விசயங்களையும் பழக்க வேண்டும். இது தான் பின்னாளில் அவர்களை கட்டுக்கோப்பாக கொண்டு வரும். நீங்கள் ஆடம்பரமாக செலவு செய்தால், குழந்தைகளும் அப்படியே செலவு செய்வார்கள். 

 

பெற்றோர்கள் தினசரி காலையில் எழுந்து சுறுசுறுப்பாக வேலைகளை செய்தால், குழந்தைகளும் அவற்றை பார்த்து கற்று கொள்வார்கள். இதன் மூலம் ஒழுக்கம் வளரும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link