சூரியனின் அருளால் ‘இந்த’ ராசிகளுக்கு புரட்டாசி மாதம் அமர்க்களமாய் இருக்கும்!

Thu, 07 Sep 2023-8:55 pm,

புரட்டாசி மாத அதிர்ஷ்ட ராசிகள்: சூரிய பகவான் சொந்த ராசியான சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு செப்டம்பர் 17ம் தேதி பெயர்ச்சி ஆகக்கூடிய புரட்டாசி தமிழ் மாதம் தொடங்குகிறது. 

புதன் அதிபதியாக கொண்ட கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் புரட்டாசி மாத கால கட்டத்தில் யாருக்கெல்லாம் நேர்மறையான பலன்கள் ஏற்படும், அதிர்ஷ்ட ராசிகள் எவை என தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தொழில், வேலையில் முன்னேற்றம் ஏற்படும். இதனுடன் இந்தக் காலப்பகுதியில் குடும்பம், உறவினர்கள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் நிதி நிலைமை வலுப்பெறும். இது தவிர, இந்த காலகட்டத்தில் பல வருமான ஆதாரங்கள் தெரியும். இதை உணர்ந்து செயல்பட்டால் பலன் கிடைக்கும். முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும்.

கடக ராசிக்காரர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். இதன் மூலம் வேலையில், தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும். திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனுடன், சூரியனின் அருளால், பிற மூலங்களிலிருந்தும் இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன, இது நிதிக் கண்ணோட்டத்தில் சாதகமானதாக இருக்கும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வேலை மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவீர்கள். இதனுடன் இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் சூரியபகவானின் அருளால் வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசாங்கத்தின் கொடுக்கல் வாங்கல் அல்லது வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.

தனுசு ராசிக்காரர்கள் உடல் நல பிரச்னைகளிலிருந்து விடுதலை அடைவீர்கள்.  தொழில், வியாபாரத்தில் பரிவர்த்தனைகள் மிகவும் சாதகமாக இருக்கும். வேலைகளை சிறப்பாக முடிப்பதற்கான சாதகமான சூழல் நிலவும். பயணத்தின் மூலம் அனுகூல பலன்கள் கிடைக்கும். பலரை சந்திக்கக்கூடிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குடும்பத்திலும், சமூகத்திலும் நல்ல பெயரை பெற முடியும்.

மகர ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் வலுவாக இருக்கும். வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் காணப்படும். இது தவிர மன தைரியத்துக்கான வீட்டில் சூரியன் இருப்பது இந்த ராசிக்காரர்களின் மன உறுதியை அதிகரிக்கும். வேலை தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் திடீர் பண ஆதாயமும் உண்டாகும். நிலம், வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் பெருகும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link