பொங்கல் ராசிபலன்: தை முதல் இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி, செல்வம், வெற்றி...அனைத்தும் பொங்கும்!!

Fri, 12 Jan 2024-10:30 am,

தை மாத (Thai Month) பிறப்பு தமிழ் பஞ்சாங்கத்தில் மிகவும் முக்கியமானது. சூரிய கடவுளை வழிபட்டு இந்த நாளில் பல நல்ல பணிகளை நாம் துவக்குகிறோம். குறிப்பாக இது விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு நன்நாளாக உள்ளது.

சூரியன் மகர ராசியில் நுழையும் போது மகர சங்கராந்தி, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புத்தாண்டின் முதல் பண்டிகை மகர சக்ராந்தி (Makar Sankaranthi), இது இந்துக்களின் முக்கிய பண்டிகையாக உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் திருவிழா (Pongal) கொண்டாடப்படுகிறது. பொங்கல் முதலான காலம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இவர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இங்கே காணலாம்.

மேஷம்- மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் மகர ராசிக்கு வருவதால் அனுகூலமான சுப பலன்கள் கிடைக்கும். உங்களின் உழைப்பின் பலன் உங்கள் தொழிலில் நிச்சயம் தெரியும். வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேறுவீர்கள். உங்களுடன் உங்கள் தந்தையும் முன்னேறுவார். குடும்பத்தில் அமைதி நிலவும்.

 

மிதுனம் - மிதுனம் ராசிக்காரர்கள் சூரியனின் சஞ்சாரத்தால் சுப பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ்வீர்கள். இந்த ராசிக்காரர்கள் நண்பர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.

கடகம் - கடக ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் சூரியனின் சஞ்சாரம் மகிழ்ச்சியைத் தரும். வாழ்க்கைத் துணையுடனான உங்கள் ஒருங்கிணைப்பு முன்பை விட வலுவடையும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். நிலம், கட்டிடம், வாகனம் என ஆடம்பரங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தனுசு - சூரியனின் இந்த பெயர்ச்சியால், உங்கள் செல்வத்தை அதிகரிக்க பல வழிகளைப் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயத்தைப் பெறலாம். இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். காதல் உறவுகளில் சூரியனின் சஞ்சாரத்தால் முழுமையான பலன்களைப் பெறுவீர்கள்.

மீனம் - சூரியனின் இந்த சஞ்சாரத்தால் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். நீங்கள் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். மேலும் உங்கள் நிறைவேறாத ஆசைகளும் நிறைவேறும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும்.

சூரிய பகவானின் அருள் பெற தினமும் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லலாம். இதி தவிர இந்த சூரிய காயத்ரியை காலையில் சொல்வதும் பலன் தரும்- 'ஓம் பாஸ்கராய வித்மஹே, திவாகராய தீமஹி, தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்'

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link