ரிசர்வ் வங்கி விதித்த கடும் அபராதத்தால் ஐசிஐசிஐ & யெஸ் வங்கிகளுக்கு என்ன பாதிப்பு?

Wed, 29 May 2024-11:07 am,

ரிசர்வ் வங்கியின் விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை, ஆர்பிஐ அவ்வப்போது ஆய்வு செய்துக் கொண்டே இருக்கும். விதிமுறைகளை மதிக்காமல் புறக்கணித்ததால்,  அது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நாட்டில் மக்களுக்கு சேவையாற்றி வரும் வங்கிகள்,  மக்களின் வசதியையும் நலனையும் கருத்தில் கொண்டு இயங்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் ரிசர்வ் வங்கி, பிற வங்கிகள் தவறு செய்தால் கண்காணித்து வாடிக்கையாளர்களின் நலனை உறுதி செய்கிறது

அதிலும் தனியார் வங்கிகளில் சேவை துரிதமானதாக இருக்கிறது என்று பலரும் நினைக்கும்போது, இரண்டு பெரிய தனியார் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது

ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் மீது ரிசர்வ் வங்கி ரூ.1 கோடி அபராதம் விதித்தது. வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் பிரிவு 46(4)(i) மற்றும் பிரிவு 47A(1)(c) ஆகிய விதிகளின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

ரிசர்வ் வங்கி, யெஸ் வங்கிக்கு ரூ.90 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த இரு வங்கிகள் மீதும் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949ன் கீழ் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

யெஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.90 லட்சம் அபராதம் விதித்தது. வாடிக்கையாளர் சேவை விதிகளை புறக்கணித்ததாலும், வங்கிகளில் உள்ளக/அலுவலக கணக்குகளை அங்கீகரிக்காமல் செயல்படுத்தியதாலும் வங்கிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது

இந்த அபராதம் வங்கிகளின் செயல்பாட்டைப் பாதிக்காது என்றும், வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகள், கடன்கள் மற்றும் சேமிப்புக் கணக்குகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதும், இது விதிமீறல்களுக்கான அபராதம் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பொறுப்புத் துறப்பு:  இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link