சிஎஸ்கே தூக்கப்போகும் இளம் வீரர் யார்? அஸ்வின் நண்பர் கொடுத்த க்ளூ

Sun, 17 Dec 2023-8:19 pm,

இந்த ஆண்டு பல சுவாரஸ்யங்களை ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே அரங்கேறி வருகிறது. மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா தாவியிருக்கும் நிலையில், அடுத்தாக இன்னும் சிலர் வேறு அணிகளுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

 

மும்பை அணியின் சீனியர் வீரர்களான பும்ரா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், அவர்களும் வேறு அணிகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துவிட்டனர்.

 

ஐபிஎல் ஏலம் முடிந்தபிறகு ஒரீரு வாரங்களில் யார் யார் எந்தெந்த அணிகளுக்கு செல்வார்கள் என்ற விவரம் முழுமையாக தெரியவரும். இந்த சூழலில் அஸ்வின் நண்பரான பிரச்சன்னா டிவிட்டரில் ஒரு பெரிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.

 

அதில், நீல நிறம் கொண்ட ஜெர்சியை அணிந்த அணியில் இருந்து மஞ்சள் நிறத்தை ஜெர்சியாக கொண்ட அணிக்கு முக்கிய வீரர் மாற போகிறார். அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ஒருவேளை இந்த டிரேட் வெற்றிகரமாக முடிவடைந்தாலும், இரு அணிகளுக்கும் நன்மை ஏற்படும் என்று பதிவிட்டுள்ளார்.

 

இது ரசிகர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அணியில் இருந்து பும்ரா, ரோகித் சர்மா அல்லது சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட 3 பேரில் யாரேனும் சிஎஸ்கே அணிக்கு வருகிறார்களா என்ற கேள்வி எழுந்தது. 

 

ஆனால் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் டெல்லி அணியும் நீல நிற ஜெர்சியை தான் பயன்படுத்தி வருகிறது. அண்மை காலமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், தோனியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். 

 

தோனியின் வீட்டு நிகழ்ச்சிகள், பார்ட்டிகளில் ரிஷப் பண்ட் கட்டாயமாக இருந்து வருகிறார். அடுத்த சீசனுடன் தோனி ஓய்வுபெறும் நிலையில், அதேபோல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்-ஐ கொண்டு தோனியின் இடத்தை நிரப்ப சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசித்து வருவதாக பார்க்கப்படுகிறது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link