IPL 2025 Auction: ஐபிஎல் 2025 ஏலத்தில் ஜாக்பார்ட் அடிக்கப்போகும் இந்த 3 வீரர்கள்!

Tue, 10 Sep 2024-11:16 am,

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் ​​ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கொல்கத்தா அணியால் 24.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதுவே ஐபிஎல்லில் ஏலம் போன அதிக தொகை ஆகும்.

 

இந்நிலையில் ஐபிஎல் 2025க்கு முன்பு மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், எந்த வீரர் இந்த ஏல தொகையை முடியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

 

ஐபிஎல் 2025 ஏலத்தில் அதிக விலைக்கு போக கூறிய 3 வீரர்களை பற்றி பார்ப்போம். ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் பெற்ற ஸ்டார்க்கின் சாதனையை முடியடிக்க போகும் 3 வீரர்கள் பற்றிய விவரம்.

 

ஃபில் சால்ட்

கடந்த ஆண்டு கேகேஆர் அணிக்காக சிறப்பாக விளையாடிய ஃபில் சால்ட் ஐபிஎல் ஏலத்தில் வந்தால் சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2024ல் 182.01 ஸ்ட்ரைக் ரேட்டில் 435 ரன்களை குவித்து இருந்தார் ஃபில் சால்ட்.

ரிஷப் பந்த்

இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஐபிஎல் 2025 ஏலத்தில் வந்தால் அவரை எடுக்க ஒவ்வொரு அணியும் போட்டி போட தயாராக உள்ளன. தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அவரின் மதிப்பு ரூ. 16 கோடி ஆகும். சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் அவரை எடுக்க ஆர்வமாக உள்ளனர்.

ரோஹித் சர்மா

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கோப்பையை வென்றுள்ள ரோஹித் சர்மாவின் தற்போதைய மதிப்பு ரூ. 16 கோடி ஆகும். ஐபிஎல் 2025 ஏலத்தில் ரோஹித் சர்மா வந்தால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை எடுக்க 50 கோடி வரை செலவு செய்ய தயாராக உள்ளனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link