Suicide Song: கேட்டாலே தற்கொலை செய்துக் கொள்ள தூண்டும் இசை! கொலைகாரப் பாடல் இது

Wed, 30 Nov 2022-2:24 pm,

இசையைக் கேட்பது மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஆனால் ஒரு பாடலால் பலர் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு. எனவே இந்தப் பாடலைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த பாடலுக்கு 'குளூமி சண்டே' என்று பெயரிடப்பட்டுள்ளது. அதைக் கேட்டு 100 பேர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது, இது 'உலகின் மோசமான பாடல்' என்று ஹவ் ஸ்டஃப் ஒர்க்ஸ் என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தப் பாடலை 'சோக ஞாயிறு' என்றும் அழைப்பர்.இந்தப் பாடல் 'ஹங்கேரிய தற்கொலைப் பாடல்' என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பாடல் 1933 இல் எழுதப்பட்டது. மேலும், இந்த பாடலை எழுதியவர்கள் ரெஜ்சோ செரெஸ் மற்றும் லாஸ்லோ ஜாவர் என்று சொல்லப்படுகிறது.

இந்த பாடல் 1935 இல் பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டில், புடாபெஸ்டில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் மற்றும் அவரது தற்கொலைக் குறிப்பில் 'குளூமி சண்டே' பாடலின் வரிகளைக் குறிப்பிட்டுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link