மலிங்கா அப்செட்! சீனியர் பிளேயர்களை அசிங்கப்படுத்துவதே பாண்டியாவுக்கு வேலையா போச்சு

Fri, 29 Mar 2024-1:44 pm,

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவருடைய ஒவ்வொரு ரியாக்ஷனுக்கும் எதிர்வினைகளை கடுமையாக பாண்டியா எதிர்கொண்டிருக்கிறார்.

ஐந்து முறை மும்பை அணி ஐபிஎல் சாம்பியனாக கோப்பையை வென்றபோது கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை அப்பொறுப்பில் இருந்து நீக்கியது. அப்பொறுப்புக்கு பாண்டியாவை கொண்டு வந்தது. எந்த காரணமும் இல்லாமல் மும்பை நிர்வாகம் செய்த இந்த நடவடிக்கைக்கு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

போதாக்குறைக்கு கேப்டன் என்ற முறையில் ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மாவை பீல்டிங் செய்ய பவுண்டரி லைனில் நிற்க வைத்து அலைக்கழித்த சம்பவமும் பெரும் சர்ச்சையாகி சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகியது,

இப்போது மலிங்காவை அசிங்கப்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஹர்திக் பாண்டியா. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை தோல்வியடைந்த பிறகு ஆறுதல் கூற வந்த அவரை தள்ளிவிட்டிருக்கிறார் பாண்டியா.

அதேபோல் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மலிங்காவும், பொல்லார்டும் அருகருகே அமர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது, அங்கு வரும் பாண்டியா மலிங்காவை மறைத்து நின்று கொள்கிறார்.

இதனால் விரக்தி அடையும் மலிங்கா அங்கு அமர்ந்திருந்த நாற்காலியை விட்டுவிட்டு எழுந்து சென்று விடுகிறார். பிறகு அந்த சேரில் பாண்டியா பொல்லார்டுடன் அமர்ந்து கொண்டு அரட்டையடிக்கிறார்.

இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஹர்திக் பாண்டியா சீனியர்களுக்கு மதிப்பே கொடுக்காமல் ஓவராக அடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு நிச்சயம் ஒருநாள் கடிவாளம் போடுவார்கள் என ஆவேசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link