மாத்திரைகளை தவறாமல் சாப்பிடுவதை நினைவில் கொள்வது பிசியான காலகட்டத்தில் அனைவருக்கும் அழுத்தத்தைக் கொடுக்கும் வேலையாக இருக்கிறது. சரியான நேரத்தில் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக மாத்திரை சாப்பிடுபவர்களில் ஏறக்குறைய 50 சதவீதம் பேர் சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்ள மறந்துவிடுகிறார்கள், இதனால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகிறது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மறதி மற்றும் மருத்துவர் சொன்ன கால அட்டவணையைப் பின்பற்ற இயலாமையே என்று கூறப்படுகிறது. 


இந்த மாத்திரை சிக்கலை நீக்க விஞ்ஞானிகள் ஒரு புதிய வழிமுறையை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு கிளிக்கில் மருந்திது வழங்கக்கூடிய மின்னணு உள்வைப்பு கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் இந்த ஆச்சரியமான விஷயம் அனைவருக்கும் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.  


மேலும் படிக்க | ஆப்பிள் சாப்பிடுங்கள் ஆனால் இந்த நேரத்தில் சாப்பிடுங்கள்


ஒரு எளிய பொத்தானை அழுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கக்கூடிய மின்னணு உள்வைப்புகளை உருவாக்க ஸ்வீடிஷ் ஆராய்ச்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.


ஸ்வீடனின் சால்மர்ஸ் யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜியின் ஆராய்ச்சிக் குழு, மாத்திரைகள் மற்றும் மாத்திரைகளுக்கு மாற்றாகச் செயல்படும் சில மூலக்கூறுகளை வெளியிட சிக்னல்களைப் பயன்படுத்தும் ஒரு பொருளைக் கண்டுபிடித்துள்ளது.


அது'பாலிமர் மேற்பரப்பு' என்று அழைக்கப்படுகிறது. இது தானாகவே செயல்படுகிறது மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட மருந்தின் அளவை வழங்கும். இது அறிமுகமாகிவிட்டால், மாத்திரை சாப்பிடுவதற்கு நோயாளிகள் இனி நினைவூட்டல்களை அமைக்க வேண்டியதில்லை.


இந்த மூலக்கூறானது மருந்தின் அளவை உற்பத்தி செய்யும் உள்வைப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படலாம்.


மேலும் படிக்க | மாத்திரை - ஆணுறை இல்லாமல் கருத்தரிப்பை தடுப்பது எப்படி?


எலக்ட்ரானிக் சாதனம் எப்படி வேலை செய்கிறது?
பாலிமர் மேற்பரப்புகள் புரதங்களைப் பிரிக்க மின் சமிக்ஞைகளை அனுப்புகின்றன, மேலும் அவை எவ்வாறு பிணைக்கப்பட்டு மேற்பரப்பில் இருந்து வெளியிடப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தலாம். இந்த செயல்முறையின் போது புரதத்தின் அமைப்பு பாதிக்கப்படாது என்று கூறப்படுகிறது.


ஆராய்ச்சியாளர்கள் உள்வைப்பின் முன்மாதிரியை உருவாக்கியுள்ளனர். பாரம்பரிய மாத்திரைகளால் பொதுவாக ஏற்படும் பக்கவிளைவுகளின் சாத்தியக்கூறுகளையும் இந்த புதிய கண்டுபிடிப்பு குறைக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.


மின்முனையின் மேற்பரப்பில் உள்ள பாலிமர் மிகவும் மெல்லியதாக இருப்பதால், உள்வைப்புக்கு ஒரு சிறிய அளவு சக்தி தேவைப்படுகிறது, எனவே அது ஒரு சிறிய மின்வேதியியல் துடிப்புக்கு வினைபுரியும்.


இந்த பொருள் பயன்படுத்தப்பட்டால், செரிமான அமைப்பில் காணப்படும் அமிலத்தன்மையின் மாற்றங்களை சமாளிக்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் படிக்க | இந்த '3' பழக்கங்கள் உங்கள் உடல் ஆசைக்கு ஆபத்தானவை


இந்த மாற்று செயல்முறையின் நன்மைகள்
இந்த மின்னணு உள்வைப்பு ஒரு நபரின் உடலில் உள்ள புரதங்களின் வெளியீடு மற்றும் உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்தக்கூடிய பண்புகளைக் கொண்டிருக்கும்.


இந்த கண்டுபிடிப்புக்கு முன்பு செய்ததைப் போல கிட்டத்தட்ட அறுவை சிகிச்சை தலையீடுகள் அல்லது ஊசிகள் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.
இந்த புதிய தொழில்நுட்பம் ஒரு வருடத்திற்குள் மக்களுக்குக் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR