மலைப்பாம்பை வெட்டிய கிராமவாசிகள்: பட்டினியால் இறக்காமல் இருக்கும் அளவிற்கு விலங்குகளின் உணவுச் சங்கிலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை தொடர்பான காணொளிகளையோ, செய்திகளையோ நாம் படிக்கும் போதும், பார்க்கும் போதும் மனம் கலங்குகிறது. சில சமயங்களில் ஏன் இப்படி ஒரு உணவுச் சங்கிலி உருவாக்கப்பட்டுள்ளது என்று நம் மனதில் தோன்றுகிறது, ஆனால் இவை இயற்கையின் விதியாகும். மனிதர்கள் எல்லாவற்றிலும் மிகவும் உணர்வுள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள், ஆனால் சில சம்பவங்கள் அப்படியா என்பது போல நம்மை சில சம்பவங்கள் சிந்திக்கத் தூண்டுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமேசான் காடுகளில் உள்ள சாண்டோ அன்டோனியோவில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள குடிமக்கள் ஒரு மலைப்பாம்பை பார்த்துள்ளனர், அந்த உயிரத்தின் வயிறு மட்டும் மிகவும் வீங்கியிருப்பதை அவர்கள் கண்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், கிராம மக்கள், அதிக நேரம் காத்திருக்காமல், தங்கள் ஆடு ஒன்று நீண்ட நாட்களாக கிடைக்காததால், அந்த மலைப்பாம்பின் வயிற்றை கிழிக்க முடிவு செய்தனர். இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், ஆனால் கிராமவாசிகள் தாங்களே மலைப்பாம்பை வெட்டி கிழுத்துள்ளனர்.


மேலும் படிக்க | காற்றில் பரந்த போர்வை.. பயந்து அம்மாவிடம் ஓடிய குட்டியானை! கியூட் வீடியோ!


மலைப்பாம்பின் வயிற்றை கிராம மக்கள் கிழுத்தினர்
இந்த சம்பவம் மார்ச் 18 அன்று நடந்துள்ளது, சிட்டியோ போவா மற்றும் போவோடோ சாண்டோ அன்டோனியோ கிராமங்களில் வசிப்பவர்கள் போவா கன்ஸ்டிரிக்டர் இனத்தின் ராட்சத பாம்பைக் கண்டனர். அதனுடைய வயிறு வீங்கியபடி இருந்துள்ளது, அது ஏதோ வேட்டையாடியுள்ளதை கிராமவாசிகள் புரிந்துகொண்டனர். அப்பகுதியில் விவசாயி ஒருவரின் ஆடு காணாமல் போனதை அறிந்ததும் மலைப்பாம்பின் வயிற்றை வெட்டி ஆட்டை மீட்க முடிவு செய்தனர்.


மலைப்பாம்பை கொடூரமாக கொன்ற கிராமவாசிகள்
இது தொடர்பான காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது, அதில் கிராம மக்கள் மலைப்பாம்பை இரக்கமின்றி குதறும் வகையில் வயிற்றை கிழித்ததை காணமுடிகிறது. ஒருவர் கழுத்தில் நிற்க, மற்றொருவர் கத்தியால் வயிற்றை அறுத்துக் கொண்டிருக்கிறார். பின்னர் அதன் வயிற்றில் இருந்து ஆட்டை வெளியே எடுத்தார்கள், ஆனால் அந்த மலைப்பாம்பு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்துவிடுகிறது. பொதுவாக மலைப்பாம்பு இரையை ஜீரணிக்க 5 நாட்கள் எடுக்கும், மேலும் அது செம்மறி ஆடுகளை அப்படியே விழுங்கும் திறம் கொண்டது. இந்த சம்பத்தை வீடியோவில் கண்ட மக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பலர் இந்த சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | Viral Video: வகுப்பறையில் மாணவனின் செயல்.. சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ