அழகிய பறவைகள் மற்றும் விலங்குகள் எப்போதும் நமக்கு ஆனந்த அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளிக் கொடுக்க வல்லன. பறவைகள் அல்லது அழகிய வீட்டு விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன.  காணக் கிடைக்காத அதிசய காட்சிகளை இணையத்தில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது வைரலாகி வரும் வீடியோவில், குருவி ஒன்று அழகாக கூடு கட்டுவதைக் காணலாம். இந்த குருவிகள் எந்த இன்ஜினியரிங் காலேஜில் படித்தன இவ்வளவு அழகாக கூடு கட்டுவதற்கு... உண்மையிலே இயற்கை ஒரு அதிசயம் தான். இந்த சின்னஞ்சிறிய குருவி எவ்வளவு அழகாக கூடு கட்டுகிறது என்பதை கீழ்க்ண்ட வீடியோவில் (Viral Video) காணலாம்.


குருவி கூடு கட்டும் வைரல் வீடியோ:




குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவையினத்தை சேர்ந்தது. நகர் புறம் ஆனாலும் சரி; கிராம புறம் ஆனாலும் சரி... மக்களோடு மக்களாக தான் சிட்டுக் குருவிகள் வாழும். மற்ற பறவையினங்கள் போல காடுகளில் தன்னிச்சையாக வாழாது. வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடுகள் கட்டினால் பெரும்பாலானோர் அதனை பாக்கியமாக தான் கருதுகின்றனர். குருவிகள் கூடுகள் கட்டும் வீட்டின் தலைமுறைகள் வாழையடி, வாழையாக தழைத்தோங்கும் என்பது நம்பிக்கை. இதனால்தான் தங்கள் வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டினால் அந்த கூட்டினை யாரும் கலைக்க மாட்டார்கள். அப்படி ஒரு வேளை யாராவது தெரியாமல் கலைத்துவிட்டால் அந்த குடும்பம் ஆட்டம் காணும் என்பது ஐதீகம். பெரும்பாலும் சிட்டுக் குருவிகள் வீடுகளில் உள்ள பரண்கள், மாடம், விட்டம் மற்றும் ஓடுகளின் இடுக்குகளுக்கு இடையில் கூடுகள் கட்டி வசிக்கும். வீடுகளில் இருப்பவர்களுக்கு அவைகள் எந்த தொந்தரவும் கொடுக்காது.


மேலும் படிக்க | Viral Video: காதலியை மயக்க ஆண் மயில் ஆடும் அற்புத ஒயிலாட்டம்... மனம் இரங்காத பெண் மயில்!
 


மேலும், புறா, குருவி, போன்ற ஜீவன்கள் தான் வீடுகளில் அதிகம் கூடு கட்டும் உயிரினங்கள். இவற்றிடம் மனிதனை விட அதிகளவு ஜீவ சக்தி இருப்பதாக கூறப்படுகிறது. இவைகளுக்கு தெய்வீக ஆற்றலை அறியும் திறன் இருப்பதாகவும் கருதப்படுகிறது. எனவே இது போன்ற உயிரினங்கள் இல்லத்தில் இருப்பது மனிதனுக்கு நன்மையே தரும் என்கின்றனர் ஆன்மீகவாதிகள். தீய சக்திகள் வீட்டில் இருந்தால் இந்த உயிர்கள் அங்கு தங்காது. எனவே வீட்டில் குருவி கூடு கட்டுவது ஒரு நல்ல அறிகுறியாக தான் இருக்கும். எனவே புறா, குருவி போன்ற உயிரினங்கள் உங்கள் இல்லத்தில் கூடு கட்டி இருந்தால் அதை கலைக்க முற்படாதீர்கள்.


மேலும் படிக்க | அட பாவி மனுஷா.. இரக்கமின்றி மயிலின் இறகுகளை பறித்த நபர்: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ