இரு மனம் சேர்வது திருமணம். பொதுவாக உலகில் நூற்றுக்கு 90 சதவிகித திருமணங்கள் அவரவர கலாசாரப்படி நடக்கின்றன. பலர் தற்போது திருமணத்தை வித்தியாசமான முறையில் செய்வதை விரும்புகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்களுடைய திருமணம் அக்னி சாட்சியாக நடைபெறுவதை விட, தண்ணீர் சாட்சியாக நடைபெறுவதையே இந்த மணமக்கள் விரும்பினார்கள். கடற்கரை திருமணங்கள் எப்போதும் வேடிக்கையாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்.


ஆனால் ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவில் திருமணம் செய்து கொண்டால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? இந்த ஜோடி கடலின் நடுவில் படகில் கல்யாணம் செய்துக் கொண்டார்கள். ம்ணமக்களுடன் செல்ல நாய்கள் மட்டுமே இருந்தன. சில விருந்தினர்கள் வேறு படகுகளில் இருந்தபடி இந்த வித்தியாசமான திருமணத்தில் கலந்து கொண்டனர்.



மனிதர்களுக்கே இடமில்லை என்றால், நாய்களுக்கு திருமணத்தில் என்ன வேலை என்று தோன்றுகிறதா? இது அந்த மணமக்களின் விருப்பம்.  தங்களுடைய செல்லப்பிராணிகளை திருமணத்தின் அழைத்துச் சென்ற இந்த காதல் ஜோடி, மற்றவர்களுக்கு திருமணத்தை நேரடியாக ஒலிபரப்பினார்கள்.


திருமணத்தில் மணமக்களை விட நாய்கள் தான் அதிக ஆடைகள் அணிந்திருந்தன. பாவம் நாய்கள் கடலில் தடுமாறி விழுந்தால் என்ன செய்வது என்று முன்யோசனையால், செல்லக் குட்டிகளுக்கு லைஃப் ஜாக்கெட்டுகளை அணிவித்திருந்தனர். திருமண மண்டபமாக மாறிப் போன படகில் நாய்கள் ஒய்யாரமாக கொண்டாட்டங்களை அனுபவித்துக்கொண்டிருந்தன.


மணமகள் மலர் கிரீடம் அணிந்து வெண்ணிற நீச்சலுடை அணிந்துள்ளார். மணமகன் மற்றும் மணமகள் இருவரும் இலைகளை மாலைகளாக கோர்த்து அணிந்திருந்தனர். படகில் அமர்ந்திருந்த மணமகனும், மணமகளும் கைகளைப் பிடித்துக் கொண்டு தங்கள் திருமண உறுதிமொழியை எடுத்தனர். 


Also Read | 22 அடி பாம்பை தோளில் சுமந்து செல்லும் அதிசய மனிதர்!


இந்த வித்தியாசமான திருமண வீடியோ இன்ஸ்டாகிராமில் துல்ஹனியா என்பவரால் பகிரப்பட்டது. வித்தியாசமான, சுவாரசியமான வியத்தகு வீடியோக்கள் மற்றும் திருமணங்கள், இந்த சமூக ஊடக கணக்கில் தொடர்ந்து பகிரப்படுகிறது.


இந்த காதல் ஜோடியின் டெஸ்டினேஷன் வெட்டிங் எனப்படும் வித்தியாசமான திருமணம், கல்யாணத்தின் அஸ்திவாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது, இதை நாம் அனைவரும் கண்டு மகிழ்கிறோம்.


திருமணங்களில் செல்லப்பிராணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமீபத்தில், மணமகள் தனது வளர்ப்பு நாயுடன் போஸ் கொடுத்த புகைப்படம் வைரலானது. நெட்டிசன்கள் அனைவரும் இதைப் பற்றி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.


Also Read | இதுபோன்ற செயல்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR