வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


குழந்தைகளின் வாழ்க்கையில் தாயின் ஸ்தானம் என்ன என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது. குந்தைகள் தங்கள் தாயுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் இயற்கையும் விசித்திரமான விளையாட்டுகளை விளையாடி விடுகிறது. இளம் வயதிலேயே தாயின் நிழலைக் குழந்தைகளிடமிருந்து பறித்து விடுகிறது.


மேலும் படிக்க | ஆற்றில் குதித்து மாஸ் காட்டும் லூட்டி பாட்டி: ‘வாவ்’ என வாய் பிளக்கும் நெட்டிசன்கள்


குழந்தைகளிடமிருந்து தாய் என்னும் உறவு பிரிந்துவிட்டால், அவர்களின் உலகமே இருண்டுவிட்டது போல் ஆகிவிடுகிறது. இந்த நேரத்தில் இந்த குழந்தைகள் சரியாகக் கையாளப்படாவிட்டால், அவர்கள் மன அழுத்தத்துக்கும் கடுமையான துன்பத்துக்கும் ஆளாக நேரிடுகிறது. 


தாயை பிரிந்து வாடும் ஒரு குழந்தையின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் தாய் இறந்த சோகத்துடன் ஒரு மாணவன் பள்ளிக்கு வருவதை காண முடிகின்றது. ஆனால், வகுப்பில் நடக்கும் விஷயம் காண்பவர்களை கண் கலங்க வைக்கிறது. 


பள்ளி தோழர்கள் பாசம் காட்டினர்


வைரலாகி வரும் இந்த வீடியோவில், பல நாட்களுக்கு பிறகு ஒரு மாணவன் பள்ளிக்கு வருவதை காண்கிறோம். அந்த மாணவனின் தாயார் திடீரென்று இறந்துவிடுகிறார். இதனால் அவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருகிறார். மாணவன் பள்ளிக்கு வந்தவுடன், அனைத்து மாணவர்களும் அவரைக் கட்டிப்பிடித்து பாசமாக தழுவிக்கொள்கிறார்கள். அந்த மாணவன், அவருடைய வகுப்பு நண்பர்கள், ஆசிரியர்கள் என யாராலும் அழுகையை நிறுத்த முடியவில்லை.


வகுப்பு முழுவதும் உணர்ச்சியால் நிரம்பியுள்ளது. தாயை இழந்த மாணவனை சக மாணவர்கள் அணைத்து ஆறுதல் கூறுகின்றனர். இந்த காட்சி காண்பதற்கு மிகவும் உணர்வுப்பூர்வமாகவும், ஆசுவாசப்படுத்தும் வகையிலும் உள்ளது. இந்த காட்சியே ஒரு காவியமாய் மிளிர்கிறது. 


இணையத்தை அழ வைத்த அந்த வீடியோவை இங்கே காணலாம்: 



வகுப்பு மாணவர்கள் அனைவரும் அழுதனர் 


தாயை இழந்த மாணவன் அழுவதைப் பார்த்து வகுப்பில் உள்ள அனைவரும் அழுவதை வீடியோவில் காண முடிகின்றது. வைரலாகி வரும் இந்த வீடியோ, goodnews_movement என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 


இந்த மாணவர் தனது தாயின் திடீர் மறைவால் சில நாட்களுக்கு பள்ளிக்கு வராமல் இருந்தார். அவர் பள்ளிக்கு திரும்பி வந்ததும், அவருக்கு ஆறுதல் கூற முழு வகுப்பினரும் அவரை அணுகி அரவணைக்கிறார்கள் என கேப்ஷனில் எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.


வகுப்பு மாணவனின் துக்கத்தில் சக மாணவர்கள் கலந்துகொள்வதையும், ஒருவரது துக்கத்தை மற்றவர் புரிந்து கொண்டு அதற்காக அழுவதையும் பார்த்து இணையமே கலங்கி நிற்கிறது. இதைப் பார்த்த பல இணையவாசிகளால் தங்கள் கண்ணீரை அடக்க முடியவில்லை.


மேலும் படிக்க | சாமி பாட்டுக்கு செமயா குத்தாட்டம் போட்ட மணமக்கள்: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR