வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


சமூக வலைதளங்களில் திருமணம் தொடர்பான பல வீடியோகளை நாம் காண்கிறோம். சில காணொளிகள் பார்த்தவுடன் அனைவரும் அதிர்ந்து போகும் வகையில் உள்ளன. இப்படி கூட மணமேடையில் நடக்குமா என வியக்கும் வகையில் சில சம்பவங்கள் நடக்கின்றன. 


சில சமயம் மாலை மாற்றும் சடங்கின்போதே மணமக்கள் பிரிந்துவிடுவதுண்டு. இப்போது அதேபோன்ற ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. இதைப் பார்த்த பிறகு, மணப்பெண் ஏன் தனது திருமணத்தை திடீரென முறித்துக் கொண்டார் என்பதற்கான காரணத்தை புரிந்துகொள்ளலாம். 


மேலும் படிக்க | பளார் என அறைந்த மணமகன், திருப்பிக்கொடுத்த மணமகள்: ஷாக் கொடுக்கும் வீடியோ 


மணமகள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரியவில்லை


சமூகவலைத்தளங்களில் தலைப்புச் செய்தியாகி வரும் இந்த வீடியோ-வில், மணமக்கள் திருமண சடங்குகளில் பங்கேற்க மணமேடையில் நின்றிருப்பதை காணமுடிகின்றது. மாலை மாற்றும் சடங்கு துவங்கும்போதே, திடீரென மணப்பெண்ணின் கோபம் அதிகமாகி மணமகன் மீது அவர் கடுப்பாவதைக் காண முடிகின்றது. 


கோபத்தில் தனது மாலையை கழற்றிய மணப்பெண் மேடையிலேயே அதை வீசி எறிகிறார். தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் அவர் மேடையிலேயே கூறுகிறார். மணப்பெண் செய்த வேலையை பார்த்து அவரது தந்தை கோபமடைகிறார். தந்தைக்கு பதிலளித்த பெண், தான் பிஎட் படித்துள்ளதாகவும், தனக்கு படித்த மாப்பிள்ளை வேண்டும் என்றும் கூறுகிறார். 


மணமேடையில் மாலையை வீசி எறிந்த மணமக்களின் வீடியோவை இங்கே காணலாம்: