மனிதர்களுக்கு செல்ல பிராணிகள் மீது எப்போதும் தனி ஈர்ப்பு உண்டு. அவைகளை பிராணிகளாய் மட்டும் பார்க்காமல் உணர்வோடு வளர்த்து வீட்டில் ஒருவராய் சேர்த்துக்கொள்வர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படி வீட்டில் ஒருவராக இணையும் பிராணிகள் எப்போதும் அந்த வீட்டுக்காகவே சிந்தித்துக்கொண்டிருக்கும். தன் மீது அதீத பாசம் காட்டுப்பவர்களை மற்றவர்கள் தாக்கவிடாமல் செய்வது, முக்கியமான நேரங்களில் தன்னுடைய இருப்பையும் உணர்த்துவது என அவைகளின் செயல்பாடுகள் அனைத்தும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும்.


மேலும் படிக்க | Collapsing House: கரையோரத்தில் இருந்தால் கடலுக்குள் குடியேறு- சீறும் கடலின் அகோர பசி


குறிப்பாக அந்த வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தையை இரண்டாம் தாய்போல் பார்த்துக்கொள்ளும்.


 



அந்தவகையில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.அந்த வீடியோவில், குழந்தை ஒன்று அழுதுகொண்டிருக்கிறது. அதனைக் கண்ட பூனைக்குட்டி ஒன்று அந்த குழந்தையை சுற்றி சுற்றி வந்து அழுகையை நிறுத்த முயற்சி செய்கிறது. 


மேலும் படிக்க | ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு! ஆட்டுக்குட்டியிடம் வெயிட்டு காட்டும் பூனைக்குட்டி!


பூனையை கண்ட குழந்தையும் சிறிது நேரத்தில் தனது அழுகையை நிறுத்திவிடுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரையும், அந்தக் குழந்தையை இந்தப் பூனை இரண்டாம் தாய் போல் பார்த்துக்கொள்கிறது என கூறி வீடியோவை பகிர்ந்துவருகின்றனர். இதனால் அந்த வீடியோ வைரலாகிவருகிறது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR