வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவு மிகவும் அற்புதமானது. இது ஒரு புது விதமான பந்தம். இதில் வார்த்தைகள் அதிகம் இருப்பதில்லை, உணர்ச்சிகளே மேலோங்கியுள்ளன. குறிப்பாக வீடுகளில், வயல்களில் மனிதர்களால் வளர்க்கப்பட்டு அவர்களுடன் நெருக்கமாக பழகும் விலங்குகள் தங்கள் முதலாளிகளிடம் அதிக பாசத்தை கொண்டிருக்கின்றன. அதேபோல் விலங்குகளை வளர்க்கும் மனிதர்களும் அந்த விலங்குகளை தங்கள் வீட்டு உறுப்பினர்களை போலவே காண்கிறார்கள். 


விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இருக்கும் அற்புதமான உறவை எடுத்துக்காட்டும் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. தற்போதும் ஒரு வித்தியாசமான வீடியோ இனையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஒரு விவசாயிக்கும் அவர் வளர்க்கும் பசு மாட்டிற்கும் இடையிலான அழகான அன்பையும் பிணைப்பையும் எடுத்துக்காட்டுகின்றது. 


பொதுவாக தங்களை வளர்த்து பாதுகாக்கும் முதலாளிகள் ஒரு குரல் கொடுத்தால் வளர்ப்பு விலங்குகள் அவர்களிடம் ஓடிச் செல்கின்றன. மனிதன் விலங்கை பார்த்துக்கொள்வது போல தோன்றினாலும், உண்மையில் விலங்குகளும் மனிதர்களை மிக கனிவுடன் பார்த்துக்கொள்கின்றன. மனம் மிகவும் கஷ்டத்தில் இருக்கும்போது பலர் விலங்குகளிடமிருந்து ஆறுதலை பெறுவதுண்டு. விலங்குகளால் தங்கள் உரிமையாளர்களை  சோகத்தில் பார்க்க முடியாது. 


ஆனால், சில சமயங்களில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவு ஆபத்தாகவும் மாறுவதுண்டு. மனிதர்கள் மிருகங்களை அடித்து துன்புறுத்துவதையும், விலங்குகள் மனிதர்களை தாக்குவதையும் நாம் அடிக்கடி பார்த்துள்ளோம். ஆனால், ஒருவருடைய சுதந்திரத்தில் மற்றவர் குறுக்கிடும்போது தான் இப்படிப்பட்ட சம்பங்களும் பெரும்பாலும் நடக்கின்றன. 


விவசாயியின் சோகம்


தற்போது வெளிவந்துள்ள வீடியோவில் மிகவும் கியூட்டான ஒரு காட்சியை காண முடிகின்றது.  சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒரு விவசாயி ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் விரக்தி அடைந்து தரையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. 
அவரைப் பார்த்தாலே ஏதோ வருத்தத்தில் ஆழ்ந்து இருப்பது தெரிகிறது. அவரது இந்த நிலையை அவரது செல்லப்பிராணிகளிகளால் பார்க்க முடியவில்லை. தங்கள் முதலாளியின் நிலையை பார்த்து விலங்குகளும் சோகமடைந்தன. 


சோகமான விவசாயியை தேற்றிய விலங்குகள் 


தங்கள் முதலாளி சோகமாக இருப்பதை பார்த்த விலங்குகள் அவரை சரி செய்ய தங்களால் ஆன வேலைகளை செய்கின்றன. அவரது நாய்கள், மாடுகள் என ஒவ்வொன்றாக அந்த விவசாயியின் அருகில் வருகின்றன. முதலில் நாய்கள் விவசாயியின் அருகில் வருகின்றன. அவரை சுற்றி சுற்றி வருகின்றன. ஆனால் அவர் நாய்களை பார்க்கவில்லை. நாய்கள் சென்று மாடுகளை அழைத்து வருகின்றன. பசு மாடுகளும் வந்து விவசாயியை உற்சாகப்படுத்த முயற்சிக்கின்றன. ஆனால், விவசாயியை சமாதானப்படுத்த முடியவில்லை. பின்னர் அவை அவரை அணைத்துக்கொள்வது போல செய்கின்றன. விவசாயியின் சோகம் அவரது விலங்குகளை எந்த அளவுக்கு பாதித்துள்ளன என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது. 


மேலும் படிக்க | மரத்தில் தொங்கும் பாம்பின் தனித்துவமான நடனம்: வீடியோ வைரல்


மனதை உருக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வந்தவுடன் வைரலாக பரவ ஆரம்பித்தது. பசுக்கள் விவசாயியை அரவணைக்கும் விதத்தை பார்த்து அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு வருகின்றனர். வீடியோ மிகவும் அழகாக இருக்கிறது. மக்கள் அதை மீண்டும் மீண்டும் பார்க்க விரும்புகிறார்கள். 


இந்த வீடியோ @1hakankapucu என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதன் தலைப்பில், "மனிதர்களை மகிழ்ச்சியடையச் செய்ய விலங்குகள் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு ஆதாரம்.” என எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏராளமான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | குத்தாட்டம் போட்ட மணமகன், வெட்கம் விலகி ஆடிய மணமகள்: பட்டையை கிளப்பும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ