நடிகர் தனுஷ்-ன் முதல் சர்வதேச திரைப்படமான "எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்" வரும் ஜூன் 21-ஆம் ‘பக்கிரி’ என்னும் பெயரில் தமிழ் மொழியில் வெளியாகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துக்கொன்ட தமிழ் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் முதல் சர்வதேச திரைப்படமான "எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்" திரைப்படம் இந்தியா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், லண்டன், மலேசியா, பங்களாதேஷ் மற்றும் நேபால் ஆகிய நாடுகளில் வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். 


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் தமிழில் ‘பக்கிரி’ என்னும் பெயரில் வெளியாகவுள்ளது. முன்னதாக இத்திரைப்படம் தமிழில் ‘வாழ்க்கையை தேடி’ என்னும் பெயரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 



இப்படத்தில் மந்திர தந்திரங்கள் மூலம் பேய்களை ஓட்டுபவராக தனுஷ் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது


நடிகர் தனுஷ் திரமைக்கு பரிசாக, முன்னதாக பாலிவுட் படமான ரான்ஜனா மற்றும் சமிதாப் படங்களில் நடித்திருந்தார். பின்னர் அவருக்கு ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாக அறிவிப்புகள் வெளியானது.



அதன் பின்னர் அவர் "எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்" படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. நீண்ட நாட்களாக தயாரிப்பு பணியில் இருந்த இப்படத்தின் பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலரினை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர்.


இந்நிலையில் தற்போது இப்படம் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.