வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் சில குறிப்பிட்ட மிருகங்களுக்கு அதிக மவுசு உள்ளது. குரங்கு, பாம்பு, நாய், பூனை ஆகியவை இவற்றில் சில. சாலைகளில் நாய்கள் பைக் அல்லது கார்களை துரத்துவதை நாம் அடிக்கடி பார்த்துள்ளோம். சில சமயம் இவை பூனைகளை தொந்தரவு செய்வதையும், சாலையில் நடக்கும் மனிதர்களின் பின்னால் அப்படியே ஃபாலோ செய்து செல்வதையும் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது மிக வித்தியாசமான ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.


சமீபத்தில் வைரல் ஆகியுள்ள ஒரு வீடியோவில் நடப்பதை பார்த்தால் நீங்கள் திகைத்துப்போவீர்கள். இந்த வீடியோவில் சில நாய்கள் ஒரு பாம்பை பாடாய் படுத்துகின்றன. நாய்களுக்கும் விஷப் பாம்புக்கும் இடையே பயங்கர சண்டை நடக்கிறது. 


மேலும் படிக்க | Viral Video: காட்டு ராஜாவுக்கு வந்த சோதனை... இலை தழைகளை சாப்பிடும் சிங்கம்..!!


பாம்பை பாடாய் படுத்தும் நாய்கள்


மூன்று நாய்கள் பாம்பை பின்தொடர்ந்து ஓடுவது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. ஒரு பாம்பு ஒரு இடத்தில் மறைந்து அமர்ந்திருக்கிறது. அப்போதுதான் மூன்று நாய்கள் அங்கு வந்து குரைக்க ஆரம்பித்தன. இந்த நாய்கள் ஒவ்வொன்றாக பாம்பை தாக்க ஆரம்பிக்கின்றன. மூன்றும் சேர்ந்து பாம்பை தாக்குகின்றன. அப்போது திடீரென ஒரு நாய் பாம்பை அதன் வாயால் பிடித்து வயலுக்கு வெளியே கொண்டு வருகிறது. இதையடுத்து மூன்று நாய்களும் விஷப்பாம்பை ஒவ்வொன்றாக கடிக்க ஆரம்பித்தன. நாயின் தாக்குதலில் இருந்து பாம்பினால் மீளவே முடியவில்லை. இந்த மூன்று நாய்களும் சேர்ந்து பாம்பை பிடித்து ஒன்றுக்கொன்று பிடுங்க ஆரம்பித்தன. 


நாய்களிடம் மாட்டிய பாம்பின் வீடியோவை இங்கே காணலாம்:



தப்பிக்க முடியாமல் தவித்த பாம்பு:


நாய்களின் தாக்குதலால் பாம்புக்கு பல காயங்கள் ஏற்படுகின்றன. இதற்குப் பிறகு, இந்த மூன்று நாய்களும் பாம்பை விடுவித்தன, பின்னர் பாம்பு நெளிகிறது மற்றும் அங்கிருந்து ஓட முயற்சிக்கிறது. ஆனால் அதனால் ஓட முடியவில்லை. மூன்று நாய்களும் சேர்ந்து மீண்டும் பாம்பை வாயில் வைத்து ரப்பர் போல தங்களை நோக்கி இழுக்கத் தொடங்குகின்றன. இந்த பாம்பு மிகவும் பெரியதாகவும் விஷமுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் மூன்று நாய்களும் அதை பற்றி கவலைப்படாமல் பாம்பை பாடாய் படுத்துகின்றன. 


இணையத்தில் வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @Animalferocious என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | மணமகளின் 'அந்த' செயலால் மணமேடையில் செம சண்டை: அப்படி என்னங்க பண்ணாங்க? வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ