Viral Video: சீறும் சிங்கத்தைப் பார்த்திருக்கலாம், சினம் கொண்ட சிங்கத்தை கண்டிருக்கலாம்... ஆனால் குச்சியைப் பார்த்து தலை தெறிக்க ஓடும் சிங்கத்தை பார்த்ததுண்டா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிங்கத்தை குச்சியால் துரத்திக் கொண்டு அதன் பின்னால் ஓடும் நபரை பார்த்ததுண்டா? பார்த்திருப்பது சந்தேகம் தான். ஆனால் சிங்கம் அப்படி பயந்துபோய் விடுமா?


என்ன நடந்து? சீறியதா சிங்கம்? துணிச்சல்காரரின் குச்சிக்கு சிங்கத்தை அடக்கும் வலிமை இருக்குமா? வீடியோவை பாருங்கள்...


மேலும் படிக்க | கோழிக்குஞ்சுக்காக சண்டையிடும் 2 பாம்புகள்: வென்றது யார்? வைரல் வீடியோவில் விடை 


சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களில் இந்த வீடியோ வித்தியாசமானதாக மட்டுமல்ல, விந்தையானதாகவும் இருக்கிறது. ஆனால் வீடியோவின் முடிவு வரை பார்த்தால் சிங்கத்தின் ஓட்டத்திற்கான காரணம் புரியும்.


காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கத்தைப் பார்த்தாலே பிற காட்டு விலங்குகள் பம்மும்.. எந்த மிருகத்திற்கும் சிங்கத்தை எதிர்கொள்ளும் தைரியம் வராது. தைரியத்தைக் காட்டினாலும், அதற்கான விலை உயிராக இருக்கலாம்.


சீறும் சிங்கத்தைப் பார்த்திருக்கலாம், சினம் கொண்ட சிங்கத்தை கண்டிருக்கலாம்... ஆனால் குச்சியைப் பார்த்து தலை தெறிக்க ஓடும் சிங்கத்தை பார்த்ததுண்டா? இந்த வீடியோ அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்யும்.



சில விலங்குகளைத் தவிர, அனைத்து விலங்குகளும் சிங்கத்தைப் பார்த்தவுடன் துண்டைக்காணோம், துணையைக் காணோம் என்று ஓடத் தொடங்கும். 


காட்டு விலங்குகளுக்கே சிம்ம சொப்பனமாக இருக்கும் சிங்கத்தைப் பார்த்தால் மனிதர்களுக்கும் பயம் அதிகமாகவே இருக்கும். சிங்கத்திடம் வம்பு வைத்துக்கொள்ள யாரும் விரும்பமாட்டார்கள்,


ஆனால் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று இந்த எண்ணத்தை மாற்றுவதுடன் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. இதில், மனிதனுக்கு பயந்து காட்டில் ஒரு சிங்கம் ஓடுவதை பார்க்க அதிசயமாக இருக்கிறது.


சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ என்ற பாடல் இந்த வைரல் வீடியோவை பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.


மேலும் படிக்க | மலைப்பாம்பா இருந்தா மலைச்சு போயிடுவேனா: கடித்துக் குதறும் முதலை


குச்சியை பார்த்ததும் ஓடும் சிங்கம் 


சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், கைகளில் குச்சியுடன் ஒருவர் காட்டில் சிங்கத்தை விரட்டிச் செல்வதை காணமுடிகிறது. தன்னை நோக்கி வரும் நபரைப் பார்த்தவுடன் சிங்கம் ஒரு குழந்தையைப் போல பயந்து அங்கும் இங்கும் ஓடத் தொடங்குகிறது.


சிங்கம் ஏன் ஒற்றைக்குச்சி வைத்திருக்கும் ஒருவரைப் பார்த்து பயப்படுகிறது என்று புரியவில்லை. ஏனெனில் பயம் என்பது சிங்கத்தின் அகராதியிலேயே கிடையாது.


சிங்கத்தின் வித்தியாசமான நடவடிக்கை 


இந்த வீடியோவை முழுமையாகப் பார்த்தால் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் சிங்கம் இது என்பது தெளிவாகிறது. தனது எஜமானின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் சிங்கம் என்பதால் அதன் சீற்றம் தணிந்து விளையாடும் செல்லப்பிராணியாக மாறிவிட்டது. 


இந்த வீடியோ, அனிமல்பவர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.


மேலும் படிக்க | Viral Video: ஆக்ரோஷமாக சண்டையிடும் சிறுத்தைகள்; இது இரைக்கான போராட்டம் 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR