இன்றைய வைரல் செய்தி: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் பாம்புகள் மற்றும் குரங்குகள் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்பு போட்டோஸ், வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உள்ளது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. பாம்புகளின் பல கதைகள், சம்பவங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. சமீபத்திலும் ஒரு பாம்பு சம்பவம் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. 


மேலும் படிக்க | நாகப்பாம்பின் வாலை இழுத்து அதிர்ச்சி கொடுத்த குரங்கு, வீடியோ வைரல்


இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியைச் சேர்ந்த லால்குவானின் நாகினா என்ற இடத்தில், நபர் ஒருவர் பாம்பை மென்று தின்றார். இது மட்டுமின்றி, இந்த நபர் உயிருள்ள பாம்பை ஃபாண்டாவுடன் சேர்த்து மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிட்டுள்ளார். இதன்போது, ​​மக்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கினர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த பாம்பின் விஷம் அந்த இளைஞனின் உடலுக்குள் செல்லாமல் அந்த இளைஞனின் உயிர் காப்பாற்றப்பட்டது பெருமைக்குரியது.


 


அங்கிருந்த மக்களின் கருத்துப்படி, அந்த நபர் பாம்பை உண்ட நேரத்தில் போதையில் இருந்ததாகவும், சிறிது நேரத்தில் பாம்பு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, வனத்துறையினர் மற்றும் போலீசார் அந்த நபரை கைது செய்தனர். இது குறித்து வன அதிகாரி கோலா ரேஞ்ச் சந்தன் சிங் அதிகாரி கூறுகையில், உயிருள்ள பாம்பை மென்று சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின்னர் அந்த வீடியோவை ஆய்வு செய்ததில், அந்த வீடியோ லால்குவான் நாகினா காலனியில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.


இது தொடர்பான விசாரணையில், ரயில்வே ஆக்கிரமிப்பு அகற்றும் போது பாம்பு வெளியே வந்ததும், அங்கு போதையில் வாலிபர் பாம்பை வாயால் மென்று கொண்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் கமலேஷ் என்பதும், நாகின் காலனியில் வசிக்கும் நபர் என்பதும் தெரியவந்துள்ளது என்றார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஹல்த்வானி பகுதியில் வனச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு, போலீசார் மற்றும் வனத்துறை குழுவினர், லால்குவானில் உள்ள கிராவல் கம்பெனியில் இருந்து குற்றவாளிகளை கைது செய்தனர்.


மேலும் படிக்க | மானின் மாஸ் சண்டை, சிங்கம் வாங்கிய பல்பு: சினிமாவை மிஞ்சும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ