ஆத்தாடி..ஒரே மரத்தில் இத்தனை விஷப் பாம்புகளா? வீடியோ வைரல்

Snakes Viral Video: இது குறித்து அப்பகுதி கிராமவாசியும், பாம்பு பிடிப்பு நிபுணருமான ராம் சரண் கூறுகையில், வனப்பகுதியாக இருப்பதால், அதிக அளவில் விஷ பாம்புகள் இங்கு நடமாடுவதால், கிராம மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 22, 2023, 12:50 PM IST
  • மரத்தில் பல பாம்புகளின் படை.
  • விஷப்பாம்புகளின் வீடியோ வைரல்.
ஆத்தாடி..ஒரே மரத்தில் இத்தனை விஷப் பாம்புகளா? வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உள்ளது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல  கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

மேலும் படிக்க | எட்டி எட்டி உதைத்தவரை கடித்து தரதரவென இழுத்துச் சென்ற கழுதை: வைரல் வீடியோ

சமீபத்திலும் ஒரு பாம்பு வீடியோ பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. இதில் ஒரு மரத்தில் ஏகப்பட்ட விஷப் பாம்புகள் இருப்பதை நாம் காணலாம். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மரத்தின் மீது பேட்டை விரித்து திறந்த வெளியில் பாம்புகள் இருக்கிறது. இந்த விஷப் பாம்புகள் வெப்பத்தால் களைத்து மரத்தில் ஏறி காற்று வாங்குவது போல் தெரிகிறது. இந்த சம்பவம் உ.பி., மாநிலம் பஸ்தி மாவட்டத்தின் கவுர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட அஜ்கைவா வனப்பகுதியில் நடந்துள்ளது.

விஷப் பாம்பு தொடர்பான வீடியோவை இங்கே காணுங்கள்: 

பத்துக்கும் மேற்பட்ட நாகப்பாம்புகள் மரக்கிளையில் அமர்ந்து பேட்டை விரித்து சிணுங்குவதை வைரலான வீடியோவில் தெளிவாகக் காணலாம். பாம்புகளின் இந்த வடிவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் பீதி அடைந்தார். மரத்தின் அருகில் கூட செல்ல யாருக்கும் தைரியம் இல்லை.

இதுவரை இதுபோன்ற விஷப்பாம்புகளின் காட்சியை நாம் பார்த்திருக்க மாட்டோம். பல ஆண்டுகளாக இந்த மரம் தங்களுடைய வசிப்பிடமாக இருப்பது போல் நாகப்பாம்புகள் அந்த மரத்தின் மீது அச்சமின்றி நடமாடுகின்றன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. அதே நேரத்தில், பல பயனர்கள் இதை ஒரு அதிர்ச்சி வீடியோ என்று கூறி வருகின்றனர்.

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | திடீரென தாக்கிய இறந்த முதலை, அரண்ட மக்கள்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News