வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


நாம் வாழும் உலகில் நாளுக்கு நாள் கொடுமைகளும் கொடூரங்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றுக்கு இடையில் பல நல்ல இதயங்களின் சில நெகிழ வைக்கும் நடவடிக்கைகள் அவ்வப்போது மனதுக்கு ஆறுதல் அளிக்கின்றன. 


குறிப்பாக வலியிலும் கஷ்டத்திலும் இருக்கும் ஜீவராசிகளுக்கு உதவுவது மிகவும் கனிவான ஒரு செயல். அதுவும் வாயில்லா பிராணிகளுக்கு உதவுவதற்கு தனி கனிவு வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 


மேலும் படிக்க | Viral Video: ஜீப்பின் மீது துள்ளி குதித்து மாஸ் காட்டும் சிறுத்தையின் வைரல் வீடியோ


பஞ்சாபின் மான்சாவில் மின்சாரம் தாக்கி தவித்துக்கொண்டிருந்த பசுவை ஒருவர் காப்பாற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், பசு மாடு தண்ணீர் தேங்கிய பகுதிக்குள் செல்வதையும், அப்போது ஒரு மின்கம்பத்தின் அருகே செல்லும் போது, அது மின்கம்பத்தை தொட்டுவிடுவதையும் காண முடிகின்றது.


மின்சாரம் தாக்கியதில் மாடு வலியால் துடித்து நடுங்குகிறது. மாடு வலியால் துடித்ததைப் பார்த்த கடைக்காரர் ஒருவர் அதை நோக்கி ஓடி வந்து தண்ணீர் தேங்கிய பகுதியில் குதிக்கிறார். முதலில் ஒரு துணியை கையில் வைத்துக்கொண்டு, அதன் கால்களைக் கட்டுகிறார். அவர் அந்த மாட்டுக்கு உதவுவதைப் அந்த வழியாகச் சென்றவர்களும் கடைக்காரருடன் சேர்ந்து பசுவை மீட்டனர்.


மாட்டிற்காக மனம் பதபதைத்து செயல்பட்ட மாமனிதனின் வீடியோவை இங்கே காணலாம்:



பல ட்விட்டர் பயனர்கள் இந்த நபரின் சிந்தனை மற்றும் பசுவை காப்பாற்றுவதில் அவர் காட்டிய அக்கறையை பாராட்டினர். “இந்த நபருக்கு எவ்வளவு பெரிய மனது.. எவ்வளவு பெரிய செயல்..இவர் அற்புதமானவர்” என்று ஒரு பயனர் எழுதினார். 


மற்றொரு பயனர், “இந்த நபருக்கு சல்யூட். இதுதான் உண்மையான மனித நேயம்.” என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு பயனர், “மான்சாவில், ஒரு மாடு மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து துடிதுடிக்கிறது. அப்போது ஒரு கடைக்காரர் கையில் துணியை கட்டிக்கொண்டு மாட்டை இழுக்கிறார். அது பசுவின் உயிரைக் காப்பாற்றுகிறது. உண்மையாகவே இந்த செயல் கருணை நிறைந்தது...கடவுள் அந்த கடைக்காரருக்கு அவர் விரும்பும் அனைத்தையும் வழங்குவாராக." என்று எழுதியுள்ளார்.


அந்த நபரை இணையாவாசிகள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இப்படிப்பட்ட பல நல்ல உள்ளங்கள் நம் உலகுக்குத் தேவை!!


மேலும் படிக்க | வெள்ளாட்டு கொம்பில் ரைடிங் போகும் குரங்கு குட்டி - வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR