வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. அதுவும், நாய், குரங்கு, யானை, புலி, பூனை ஆகியவற்றுக்கு இணையத்தில் மவுசு அதிகம். விலங்குகளிடம் காணப்படும் அப்பாவித்தனமும், அவை செய்யும் குறும்புத்தனமும் இந்த வீடியோக்களை மக்கள் விரும்பி பார்க்க முக்கிய காரணங்களாக உள்ளன. குரங்கு ஒன்று செய்யும் ஒரு கியூட் செயலின் வீடியோ சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டது. இது காண்பவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


இந்த வீடியோ மிருகக்காட்சிசாலை ஒன்றில் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. இங்கு குரங்கு கொடுக்கும் ஒரு ரியாக்‌ஷன் மக்களை ஆச்சரியப்படுத்தியது.


ஒரு மிருகக்காட்சி சாலையில், குரங்கை மகிழ்விக்க, ஒரு நபர் அதற்கு முன்னால் ஒரு மேஜிக் வித்தையை காட்டுகிறார். இதை பார்த்து அந்த குரங்கால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. தனக்கு ஏற்பட்ட பூரிப்பை வெளிப்படுத்தும் வகையில், குரங்கு அங்கும் இங்கும் ஓடுகிறது. கைகளை கண்களிலும் முகத்திலும் வைத்துக்கொண்டு ஆச்சரியப்படுகின்றது. மேஜிக் வித்தையை பார்த்து குரங்கு காட்டிய அதன் யதார்த்தமான ரியாக்‌ஷன் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதை ஒருவர் வீடியோ எடுத்தார். 


மேலும் படிக்க | சும்மா இருந்த பசுவை சீண்டிப்பார்த்த நபர்: வெச்சி செஞ்ச பசு, ஷாக் கொடுக்கும் வைரல் வீடியோ 


இதை இணயத்தில் பார்த்த இணையவாசிகளாலும் குரங்கின் ரியாக்‌ஷனை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்த குரங்கு காட்டும் முகபாவங்களும், அதன் செயல்களும் மிகவும் வேடிக்கையாக இருக்கின்றன.


மேஜிக் பார்த்த குரங்கின் வேற லெவல் ரியாக்‌ஷனை இங்கே காணலாம்:



வைரலான இந்த வீடியோ வனவிலங்கு வைரல் தொடரில் @cctv_idiots என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. கண்ணாடி கூண்டுக்குள் இருக்கும் குரங்குடன் அங்குள்ள மக்கள் நன்றாக பொழுதை கழிப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. 


வீடியோவை பார்த்தால், மிருகக்காட்சி சாலைக்கு வந்த ஒரு நபர் காட்டிய மாயாஜாலத்தினால், அந்த குரங்கு மயங்கியே போய்விட்டது போல் தோன்றுகிறது. இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வேடிக்கையான வீடியோவுக்கு 5.9 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களும் 10 ஆயிரம் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | வம்பிழுத்த சிறுவன்....கொதித்தெழுந்த குரங்கு; நடந்தது இதுதான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ