வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


சமூக ஊடகங்க யுகத்தில், அனைவரும் தங்களை தனித்துவமாக காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். புகைப்படங்கள் மூலமும், செல்பி மூலமும் தங்களை ஆன்லைனில் வித்தியாசமாக காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த செல்ஃபி மோகம் ஆபத்தாக முடிந்து விடுகிறது. 


அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதில் ஒரு நபர் செல்பி எடுக்கும் மோகத்தில் தனது உயிரையே ஆபத்தில் தள்ளுவதை காண முடிகின்றது. இந்த சம்பவம் முழுதும் கேமராவில் பதிவாகி உள்ளது. ஒரு புறம் இவர்களை பார்க்க பாவமாக இருந்தாலும், மறுபுறம் இந்த வீடியோவை பார்த்து சிரிப்பையும் அடக்க முடியவில்லை. இந்த வீடியோ சில மணிநேரங்களில் ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் நெட்டிசன்களும் இதை மிகவும் விரும்பி வருகின்றார். இதில் நாம் கற்றுக்கொள்ளவும் பாடம் உள்ளது. 


பைக்கில் செல்ஃபி எடுத்த நபர்
வெளியான வீடியோ-வைப் பார்த்தால், ​​​​அந்த நபர் தனித்துவமான உள்ளடக்கத்தை உருவாக்கும் விவகாரத்தில் ரிஸ்க் எடுத்துள்ளது தெரிகிறது. வீடியோவில், நெடுஞ்சாலையில் ஒருவர் முழு வேகத்தில் பைக்கை ஓட்டிச் செல்வதைக் காண முடிகின்றது. திடீரென பைக்கை ஓட்டும் நபர் ஹேண்டிலை விட்டுவிட்டு திரும்பி அமர்ந்துகொள்கிறார். 


மேலும் படிக்க | 'ஜஸ்ட் மிஸ்' பிரேக் பிடிக்காத கப்பல் - வைரல் வீடியோ 


பின்னால் அமர்ந்திருந்தவர் அதை விட ஒரு படி மேலே சென்று, பைக்கிலேயே எழுந்து நிற்கிறார். ஆனால், இவர்களின் சாகசம் இதோடு நிற்கவில்லை. நின்றுகொண்டிருக்கும் நபர் தன் பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து செல்ஃபி எடுக்கத் தொடங்குகிறார். 


திக்குமுக்காடிய பைக் 
அந்த நபர் பைக்கில் ஏறி செல்ஃபி எடுப்பதற்குள் அவர் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுகிறார். ஹேண்டிலை விட்டு திரும்பி அமர்ந்திருக்கும் நபரும் பைக்கைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார், ஆனால் அவரால் அது முடியவில்லை. அவரும் விழுந்து விடுகிறார். 


இப்படி தனித்துவமாக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்தவர்கள், ஒருவர் சாலையிலும் மற்றொருவர் சாலை ஓரத்திலும் விழுந்துவிடுகிறார்கள். ஃபிரேமில் இந்த காட்சிகளை பார்த்தால் சிரிப்பு வருகிறது. ஆனால், இதனால் பெரிய ஆபத்து நேரிடக்கூடும் என்பதையும் நாம் மறப்பதற்கில்லை. இப்படி செய்பவர்கள் தங்களுக்கு மட்டுமல்லாமல் சாலையில் வரும் பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கிறார்கள். 


செல்ஃபி எடுக்க போய் சொதப்பிய நபரின் வீடியோவை இங்கே காணலாம்:


 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)


இந்த வேடிக்கையான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது bhutni_ke_memes என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதில் நெட்டிசன்கள் அதிக அளவில் பலவித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | என்னய்யா நடக்குது இங்க: விருந்தில் தாத்தா செஞ்ச வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR