பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 22 வயதான பத்திரிகையாளர் முகம்மது பிலால் கான் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் ராணுவத்தையும் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ குறித்து விமர்சித்த காரணத்திற்காக இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என இணையவாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


பத்திரிகையாளர் முகம்மது பிலால் கான் ட்விட்டரில் 16,000 பின் தொடர்பாளர்களை கொண்டுள்ளார். அவரது யூ ட்யூப் சேனலில் 22,000 பேரும் ஃபேஸ்புக்கில் 22,000 பேரும் பின் தொடர்பாளர்கள் உள்ளனர். சமூக பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது பேசி வந்த பிலால் கான் இறப்பு அவரது பின்தொடர்பாளர்களுக்கு பெரும் இழப்பாய் அமைந்துள்ளது.


கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி கடந்த ஞாயிறு அன்று இரவு நண்பன் பரா கஹுகு போன் செய்து அழைக்கவும் ஜி-9 என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அந்த நண்பர் அவரை காட்டுக்குள் அழைத்துச் சென்றதாக காவல்துறை தெரிவிக்கின்றது.


மேலும் பிலால் கானை கொல்ல இருபக்கமும் கூர்மையாக உள்ள கத்தியை பயன்படுத்தியுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் சடேர் மாலிக் நயீம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளரின் நண்பரும் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார். சமூக ஊடக ஆர்வலர் என்பதைத் தவிரல் திரு.கான் ஒரு ஃபிரீலான்ஸ் பத்திரிகையாளராகவும் இருந்தார். 


அவர் கொல்லப்பட்ட தகவல் வெளியானதும் #Justice4MuhammadBilalKhan  என்ற ஹேஷ் டேக் ட்ரண்ட் ஆக தொடங்கியுள்ளது.


ராணுவத்தையும் உளவத்துறையையும் விமர்சனம் செய்த காரணத்தால் பிலால் கொல்லப்பாட்டார் என்ற இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.