Viral Video: தினம் தினம் இணையத்தில் பல வித வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றில் சில மிக வேகமாக வைரலும் ஆகின்றன. குறிப்பாக விலங்குகளின் வீடியோக்கள் மிக விரைவாக இணையவாசிகளால பகிரப்பட்டு வைரல் ஆகின்றன. அதுவும், பாம்பு, குரங்கு, நாய், பூனை, யானை ஆகியவற்றின் வீடியோக்களை இணையவாசிகள் மிக விரும்பி பார்க்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பின் வீடியோக்கள் நெட்டிசன்களிடையே அதிக ஆர்வத்தை ஈர்க்கின்றன. பாம்புகளின் வாழ்வில் நடக்கும் விஷயங்களை நம்மால் அருகில் நின்று பார்க்க முடியாது. ஆகையால், இவை வீடியோ வடிவில் நம் முன் வரும்போது, இவற்றை காண ஆர்வமும் அதிகரிக்கின்றது. கடந்த சில நாட்களாக பாம்புகளுக்கு இடையிலான சண்டை வீடியோக்களை இணையத்தில் அதிகமாக காண முடிகின்றது. தற்போதும் அப்படி ஒரு வீடியோ பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது.


இந்த வீடியோவில் இரண்டு நாகப்பாம்புகள் பயங்கரமான சண்டையில் ஈடுபட்டுள்ளதை காண முடிகின்றது. இதை பார்க்க மிகவும் பயங்கரமாக உள்ளது. ஆனால், கடைசியில் காணப்படும் ட்விஸ்ட் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.


நாகப்பாம்புகளின் பல சண்டைகளை நாம் இணையத்தில் பார்த்துள்ளோம். ஆனால், இந்த சண்டை மிக வித்தியாசமானது. வீடியோவின் துவக்கத்தில் எதிர் எதிரே உள்ள இரு நாகப்பாம்புகள் மிக ஆக்ரோஷமாக ஒன்றை ஒன்று பார்ப்பதையும், பின் பின்னிப்பிணைந்து சண்டை இடுவதையும் காண்கிறோம். இந்த சண்டை சில நொடிகள் செல்கிறது. ஆனால், அதன் பிறகு நடக்கும் விஷயம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. 


பின்னிப்பிணைந்து சண்டையிட்ட பாம்புகள் திடீரென தங்களை விடுவித்துக்கொள்கின்றன. அதன் பிறகு இரண்டும் வெவ்வேறு வழியில் தங்கள் வேலையயை பார்க்க செல்கின்றன. இதை பார்க்க மிக ஆச்சரியமாக உள்ளது. சண்டையும், கோவமும் முழுமை பெறாமல் பாதிலியேலே நின்றுவிட்டது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. தாங்கள் எதற்காக சண்டை போடுகிறோம் என்பதே புரியாமல் சண்டை போட்டு, பின் தனித்தனியே சமாதானமாக போவது போல இந்த பாம்புகள் நடந்துகொள்கின்றன. 


மேலும் படிக்க | தன் குட்டிகளிடம் சிக்கித்தவிக்கும் தந்தை கொரில்லா! என்னா சேட்டை..வைரல் வீடியோ..


இணையவாசிகளை குழப்பிய நாகப்பாம்புகளின் வீடியோவை இங்கே காணலாம்:



வைரலாக பரவி வரும் இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @sarpmitra_neerajprajapat என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.


'என்ன ஆச்சு இந்த பாம்புகளுக்கு?’ என ஒரு இணையவாசி கேள்வி எழுப்பியுள்ளார். ‘இது என்ன சண்டை? யார் வென்றது?’ என மற்றொருவர் கேள்வி வியந்துள்ளார். ‘இது சண்டையே அல்ல.... பாசமாக கட்டிப்பிடித்து பின் பிரிந்து சென்றுவிட்டார்கள்’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.


மேலும் படிக்க | போனில் மூழ்கிய சிறுவன்! உள்ளே நுழைந்த பாம்பு! அடுத்து என்ன நடந்தது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ