வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்கு மிகவும் குறும்புத்தனமான விலங்காக இருப்பதுடன் அதிக பாசமும் நிறைந்தது. ஆனால் சில நேரங்களில் குரங்குகள் பல அபயகரமான செயல்களையும் செய்கின்றன. சில சமயங்களில் குரங்குகளின் குறும்புகள் அளவை மீறும்போது அது மனிதர்களுக்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. நம்மை அச்சத்தின் உச்சிக்கு கொண்டுசெல்லும் பல நிகழ்வுகளையும் சமூக ஊடகங்களில் நாம் பார்த்துள்ளோம்.


சாலையில் நடந்து செல்லும் நபர்களின் கைகளில் இருந்து உணவு மற்றும் பிற பொருட்களை குரங்குகள் பறிப்பதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். குரங்குகள் கைக்குழந்தைகளை தூக்கிக்கொண்டு ஓடும் நிகழ்வுகளை பற்றியும் நம்மில் சிலர் கேள்விப்பட்டிருப்போம். தற்போதும் பீதியை கிளப்பும் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | ஹெல்மெட் ..கூலிங் கிளாஸூடன் ரைடிங் புறப்பட்ட நாய்; வைரல் வீடியோ 


வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தவர்களின் உள்ளம் நடுங்கியது. வீடியோவில், சில குழந்தைகள் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அப்போது திடீரென ஒரு குரங்கு அவர்களை நோக்கி வருவது தெரிந்தது. இந்தக் குரங்கு மிக வேகமாக வந்து அங்கு இருந்த குழந்தைகளில் ஒரு குழந்தையை பிடித்து இழுத்துச் செல்லத் தொடங்குகிறது. 


எனினும், நல்ல வேளையாக, குரங்கு இந்த அப்பாவி குழந்தையை சில மீட்டர்கள் இழுத்துச்செல்வதற்கு முன்னதாகவே குழந்தை மீதான குரங்கின் பிடி விலகுகிறது. ஆனால், மீண்டும் குரங்கு குழந்தையிடம் வந்ததா? குழந்தையை காப்பாற்ற யாரும் வரவில்லையா?


மனதை பதபதைக்க வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்: 



குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய நபர்


குரங்கு குழந்தையை இழுத்துச் செல்லும்போதே, ஒரு நபர் தூரத்திலிருந்து கத்திக்கொண்டே அவர்களை நோக்கி வருவதையும் வீடியோவில் காண முடிகின்றது. அந்த நபர் அருகில் வருவதைக் கண்டு குரங்கு சிறிது பயந்து குழந்தையை சாலையில் அப்படியே விட்டு ஓடுகிறது. இவ்வாறு வீரமும், வேகமும் காட்டி குழந்தையை குரங்கு பிடியில் இருந்து அந்த நபர் விடுவித்துள்ளார். 


இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. குழந்தையின் மீதிருக்கும் குரங்கின் பிடி தளர்ந்தவுடன்தான் நமக்கு நிம்மதி கிடைக்கின்றது. இந்த வீடியோ சமூக ஊடகத் தளமான ட்விட்டரில் @Enezator கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | ஓவர் தன்னம்பிக்கை உடம்புக்கு ஆகாது பாஸ்! யாரோடு மோதுற தெரியுமா? வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ