சென்னை: புதிதாக திருமணமான ஜோடிக்கு திருமண பரிசாக 5 லிட்டர் பெட்ரோல் கொடுக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை குறித்த எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த பரிசு அமைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எரிபொருட்களின் விலை உயர்ந்து சாமானிய மக்களின் பட்ஜெட்டில் துண்டு விழுந்திருக்கும் சமயத்தில் இந்த திருமண பரிசு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


புதிதாக திருமணமான தம்பதியினர் தங்கள் திருமண வரவேற்பில் வழக்கத்திற்கு மாறான பரிசைப் பெற்றனர். புதுமண தம்பதிகளுக்கு 5 லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்ட கேன்கள் கொடுக்கப்பட்டன.


இந்த திருமண பரிசை கொடுத்தவர் யார் தெரியுமா? நகைச்சுவை நடிகர் மயில்சாமி தான்!  தம்பதியருக்கு தனித்துவமான பரிசைக் கொடுத்து விழாவில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் நடிகர் மயில்சாமி. யாராலும் என்றும் மறக்கமுடியாத இந்த பரிசு கொடுக்கும் தருணத்தின் புகைப்படங்கள் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது.


புதுமணத் தம்பதிகளை வாழ்த்துவதற்காக மேடைக்கு சென்ற நகைச்சுவை நடிகர் மயில்சாமி, பெட்ரோல் நிரப்பிய இரண்டு பிளாஸ்டிக் கேன்களை பரிசளித்தார்.  



பல ஊடக அமைப்புகளால் பகிரப்பட்ட திருமண விழாவின் புகைப்படங்கள் மயில்சாமியின் சாதுரியத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. நகைச்சுவை நடிகர் என்றாலே, சரியான நேரத்தில் உகந்த விஷயத்தை வெளிப்படுத்துவதில் தானே அவர்களின் வெற்றி இருக்கிறது?


இது பற்றி மயில்சாமியிடம் கேட்டபோது, எரிபொருள் விலை உயர்வு குறித்து தனது கவலையை வெளிப்படுத்தும் முயற்சியாக இரண்டு கேன்கள் பெட்ரோலை திருமணப் பரிசாக கொடுத்ததாக சொன்னார். திருமணப் பரிசு என்பது தம்பதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் கொடுத்ததாகவும் வைத்துக்கொள்ளலாம்.


Also Read | Destination Wedding! தண்ணீர் சாட்சியாக நடைபெறும் திருமணத்தின் வீடியோ வைரல்


பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கும் தமிழக அரசின் சமீபத்திய முடிவை மயில்சாமி பாராட்டியுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த கவனமும் செலுத்தவில்லை என்றும் அவர் கருதுகிறார்.


இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மயில்சாமி தமிழகத்தின் பிரபல நகைச்சுவை நடிகர்.


அது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், சன் டிவியின் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் பணியாற்றியிருக்கிறார். கண்களை கைது செய் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக 2004 ஆம் ஆண்டு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் பெற்றுள்ளார் மயில்சாமி.


Also Read | Viral Video: வயதானாலும், உறுதியும் உத்வேகமும் குறையாமல் இணையத்தை கலக்கும் 85 வயது முதியவர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR