சண்டகோழி 2 படத்திற்காக தனது அடையாளத்தினையே மாற்றியுள்ளார் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் அவர்கள்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் ஆகியோர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் சண்டக்கோழி. 


முதல் பாகத்தின் வெற்றிக்கு பின்னர் இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை படக்குழுவினர் தயாரித்து வருகின்றனர். விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி மீண்டும் கைகோர்த்துள்ள இந்த இரண்டாம் பாகத்திலும் ராஜ்கிரண் நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இது விஷாலின் 25-வது படமாகும். இவர்களுடன் வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடித்து வருகின்றனர்.




யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சக்தி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதனை ‘பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்து வருகிறார். 


இப்படத்தின் படபிடிப்பு காட்சிகள் நடைப்பெற்று வரும் நிலையில் இப்படத்தில் நடித்து வரும் வரலக்ஷ்மி சரத்குமார், படத்தில் கிராமப் பெண்ணாக புடவை கட்டி காட்சியளிக்கும் புகைப்படத்தினை தற்போது வெளியிட்டுள்ளார்.


நகர்புற பெண்ணாக திரப்படங்களில் வளம் வந்த வரலக்ஷ்மி, சமீபத்தில் தான் நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தில் புடைவை கட்டி குறுகிய காட்சிகளிலேயே வந்துச் சென்றார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சண்டகோழி 2 படத்தில் முழு கிராம்பெண்ணாக வளம் வருவார் எனும் எதிர்பார்ப்பினை தூண்டியுள்ளார்!