மத்தியப் பிரதேச தலைநகர் இந்தூரில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சாலையில் செல்லும் அனைவரையும் முகம் சுளிக்கும் அளவிற்கு அநாகரீகமான விஷயத்தை இளம் பெண் ஒருவர் செய்துள்ளார். பெண் ஒருவர் இந்தூரில் உள்ள முக்கிய சாலையில் குட்டையான ஷார்ட்ஸ் மற்றும் பிரா அணிந்து, சுற்றி திரிந்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த மக்களை அதிர்ச்சியடை செய்துள்ளது. இந்த சம்பவத்தை சிலர் தங்கள் மொபைல் போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். பின்பு இந்த சம்பவத்திற்கு மோசமான விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த பெண் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | குடை போல கொம்பை பரந்து விரிந்து வச்சிருக்கும் இந்த விலங்கை பார்த்திருக்கீங்களா? - வீடியோ


வைரலான இந்த வீடியோவில், இளம் பெண் ஒருவர் சிவப்பு நிற மேலாடை மற்றும் பழுப்பு நிற ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு, இந்தூரின் மேக்தூத் சௌபதி பகுதியில் உள்ள சாலையில் நடந்து செல்கிறார். அந்த பகுதியில் வாகனத்தில் சென்றவர்களும், அங்கிருந்தவர்களும் இதனை அதிர்ச்சியாகவும், ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். பின்பு அந்த பெண் சாலையின் நடுவிலும், மார்க்கெட் பகுதியிலும் சுற்றிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார். 'இந்தூர் வைரல் கேர்ள்' என்ற தலைப்பில் இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. இது போன்று பொது இடங்களில் ஆபாசமான முறையில் ஆடைகளை அணிந்ததற்காக பலரும் அந்த பெண்ணை திட்டி பதிவிட்டு வந்தனர். 



மன்னிப்பு கேட்ட இளம் பெண்


தான் செய்த செயல் வைரல் ஆகி, பெரும் இன்னல்களை சந்தித்த நிலையில் அந்த பெண் தற்போது மன்னிப்புக் கேட்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தான் தவறுதலாக செய்த இந்த செயல்களுக்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அவரது மன்னிப்பு வீடியோவில், கைகளை கட்டிக்கொண்டு "நான் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த இப்படி செய்யவில்லை. எனது வீடியோ யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் நான் வருந்துகிறேன். நான் செய்தது மிகவும் தவறு, இதை நான் செய்திருக்கக் கூடாது என்பதை இப்போது உணர்கிறேன். தயவுசெய்து என்னை இப்போது தனியாக விட்டுவிடுங்கள்" என்று கண்ணீருடன் பேசி இருந்தார். 


மேலும் தனது செயல்களால் வெட்கமடைந்ததாகவும், தனது செயல்கள் தனக்கு ஏற்படுத்திய அவமானத்தால் தற்கொலை செய்து கொள்வது போல் உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். "எனக்கு இந்த சமூகத்தில் வாழ தகுதி இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள், நான் பெரிய தவறு செய்துவிட்டேன், என் செயலால் நான் வெட்கப்படுகிறேன்” என்று பேசி உள்ளார். இந்தோரின் சப்பான் டுகான் மற்றும் மேக்தூத் சௌப்பட்டி ஆகிய பகுதிகளில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகில் உள்ள விஜய் நகர் என்ற பகுதியில் தான் அந்த பெண்ணும் வசித்து வந்துள்ளார். பல இந்து அமைப்புகள் இந்த இளம் பெண் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ஆபாசத்தை பரப்பியதாக குற்றம் சாட்டி விஜய்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.



மேலும் படிக்க | பளார்!! ஒரே அடி... பூனைக்கு பயந்து ஓடிய பாம்பு: பட்டையை கிளப்பும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ