மத்தியப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவர் மாநகராட்சி ஆணைய அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் பந்தாடும் வீடியோ!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மாநகராட்சி ஆணைய அதிகாரிகளை பாஜக எம்எல்ஏவும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனுமான ஆகாஷ் விஜய்வர்கியா, கிரிக்கெட் மட்டையால் தாக்கி விரட்டியடித்தார். அவரது ஆதரவாளர்களும் அதிகாரியைத் தாக்கி விரட்டியடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த வீடியோவில், ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருப்போர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நகராட்சி ஊழியர்கள் அங்கு சென்றுள்ளனர்.  அவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே அதிகாரி ஒருவரை ஆகாஷ் தாக்குகிறார்.  எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியபடி, நகராட்சி அதிகாரிகளை விரட்டி அடிக்கின்றனர்.  இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.  இந்த முழு சம்பவமும் ஊடக நபர்களால் கேமிராக்களை கொண்டு படம் பிடிக்கப்பட்டது.



எவ்வாறாயினும், இந்த முழு சம்பவமும் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பொலிஸ் அதிகாரிகள் ஆஜரானார்கள், அவர்கள் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகையில் அதிகாரிகளை மீட்டனர்.