Venus Mercury Asth: சுக்கிரன் மற்றும் புதன் இரண்டுமே சுப கிரகங்கள். ஆனால், கிரகங்களின் அரசரான சூரியன், தற்போது இந்த இரண்டு சுப கிரகங்களின் சக்தியையும் பெற்றுள்ளது, அதாவது, தற்போது புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களும் அஸ்தமனமாகியுள்ளன. முக்கியமான இந்த இரண்டு கிரகங்கள் அஸ்தமனமாக இருப்பதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள், மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாறுதல்கள் நடைபெறுகிறது. தற்போது, ரிஷப ராசியில் பல கிரகங்களின் சேர்க்கை இருந்தாலும், மறுபுறம் ஜூன் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்துள்ளது. புதன், சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் அஸ்தமான அந்த நிகழ்வினால், இரண்டு சுபகிரகங்களின் சக்தியையும் சூரியன் பெற்றுவிட்டார்.


ரிஷபம், துலாம் ஆகிய இரண்டு கிரகங்களுக்கும் அதிபதி சுக்கிரன் என்றால், மிதுனம், கன்னி ஆகிய இரண்டு கிரகங்களின் அதிபதி புதன். எனவே, தங்களுடைய ராசியாதிபதி அஸ்தமனத்தில் இருக்கும்போது இந்த நான்கு ராசிகளும் மிகவும் கஷ்டப்படும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும்? நான்கு ராசிகளின் பலன்களை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | அங்காரக தோஷத்தை விலக்கிக் கொண்ட செவ்வாய்! ’3’ ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கு!


ரிஷபம்
ரிஷப ராசியில் பல கிரகங்கள் சேர்ந்திருக்கும் நிலையில், சூரியனின் அதீத சக்தியில் சுக்கிரன் அஸ்தமானமாகியுள்ள நிலையில் இந்த ராசிக்காரர்கள், அதீத நம்பிக்கையை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்கவேண்டும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். குடும்பத்தில் பெரியவர்களுடன் கருத்துமோதல் வந்தாலும், தாழ்ந்து போவது நல்லது. வியாபாரிகளுக்கு சரியான நேரம் இல்லை, நஷ்டம் அதிகமாக இருக்கும். பெண்களிடம் சற்று மரியாதையுடன் நடந்துக் கொள்ளவும். பெண்கள் மூலமாக அவப்பெயர் வந்து சேரலாம்.


மிதுனம்
பயணங்கள் நல்ல பலன் கொடுக்கும். புதிதாக சந்திப்பவர்கள் மூலமாக நல்ல எதிர்காலம் அமையும். கட்டிடம் தொடர்பான வேலைகளை செய்ய ஏற்ற நேரம் இது. உடன் பிறந்தவர்களுடனான உறவில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணத்தை முதலீடு செய்யும்போது கவனமாக இருக்கவும், புதன் அஸ்தமனமாகி இருப்பதால், மறதி ஏற்படும். மறதியால் நஷ்டம் ஏற்படலாம்.


கன்னி
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணைவரின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். நீண்ட பயணங்கள் ஏற்படும். சூரியனின் பலம் அதிகமாக இருப்பதால், அரசாங்க வேலைகள் கைகூடும். புதன் மற்றும் சுக்கிரன் அஸ்தமனமாக இருப்பதால் சிந்தித்து செயல்படுவதும், வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதும் நல்லது.


துலாம்
துலாம் ராசிக்கு சுக்கிரன் அதிபதியாக இருப்பதால், தற்போது சூரியனின் பலம் அதிகரித்திருப்பதால், தடைபட்ட வேலைகள் தாமதமில்லாமல் நடந்து முடியும். ஆனால், ஆரோக்யத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தன்னம்பிக்கை குறையும். கோபம் அதிகரிக்கும். சூரியனை வழிபடுவது நல்லது. கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், அதிர்ஷ்டத்தை நம்பி வேலையில் இறங்குவது தவறு. தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ரிஷபத்தில் கஜகேசரி யோகம்! அபரிதமான செல்வத்தால் சந்தோஷத்தில் குதிக்கும் ‘சில’ ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ