சனி பகவானின் உதயம், ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களின் ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம், இயக்கத்தில் ஏற்படும் மாற்றம், அஸ்தமனம், உதயம் என அனைத்திற்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக கருதப்படும் சனி பகவானின் சிறிய மாற்றங்களும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். பொதுவாக கிரகங்களின் அஸ்தமன நிலை அத்தனை சுபமாக கருதப்படுவதில்லை. ஒரு கிரகம் அஸ்தமனமானால் அது பலவீனமடைகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனவரி 30, 2023 அன்று, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் அஸ்தமனமானார். இது பல ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை அளித்து வந்தது. மார்ச் 6 ஆம் தேதி சனி கும்ப ராசியிலேயே உதயமானார். சனியின் உதயம் பலரது வாழ்வில் பெரும் நிம்மதியை தந்துள்ளது. சனி பகவானின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், 3 ராசிக்காரர்களுக்கு சனி உதயம் பம்பர் பலன்களைத் தரப்போகிறது. சனியின் உதயத்தால், தன ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகத்தின் மூலம் இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். இதனுடன், வேலை-வியாபாரத்தில் பெரும் வெற்றிகள் கிடைக்கும். 


சனி உதயம் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்


ரிஷபம்: 


ரிஷப ராசிக்காரர்களின் தொழிலுக்கு சனியின் உதயம் மிகவும் சாதகமாக இருக்கும். இவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தற்போதைய வேலையில் பெரிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். இந்த காலத்தில் புதிய வேலைகளைத் தொடங்கலாம். திருமணத்துக்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகலாம். 


மேலும் படிக்க | Trigrahi Yoga: மீனத்தில் உருவாகும் 'திரிகிரஹி யோகம்' மீனத்துக்கு ஜாலி! தனுசுக்கு?


சிம்மம்:


சனியின் உதயத்தால் உருவாகும் செல்வம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பெரிய பலன்களைத் தரும். இவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து திடீரென பண வரவு இருக்கும். நீண்ட நாட்களாக ஓரிடத்தில் சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்களால் லாபம் உண்டாகும். பழைய பிரச்சனைகள் தீர்க்கப்படும். செயல்களில் வெற்றி உண்டாகும்.


கும்பம்: 


கும்ப ராசியில் சனி உதயமாகியுள்ளார். சனியின் உதயத்தால் உருவாகும் தன ராஜயோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அளிக்கும். கும்ப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சனி உதயம் சஷ ராஜயோகத்தையும் உருவாக்குகிறது. இந்த இரண்டு யோகங்களும் கும்ப ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்களைத் தரும். ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து இந்த காலத்தில் சற்று நிவாரணம் பெறலாம். பண வரவு சாதகமாக இருக்கும். முன்னேற்றப் பாதை திறக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - பணமழையில் நனையப்போகும் ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ