சனி பகவான்: வேத ஜோதிடத்தில், கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் அவ்வப்போது தங்கள் இயக்கத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். அவற்றில் ஏற்படும் மாற்றத்தால் பல்வேறு சுப, அசுப யோகங்கள் உருவாகின்றன. சனிக்கிழமை சனி பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில், மக்கள் சனி பகவானின் ஆசியைப் பெற பல்வேறு விதமான பூஜைகளையும் பரிகாரங்களையும் செய்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி பகவான் - நீதியின் கடவுள்


சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். ஒருவருக்கு சனி பகவானின் அருள் இருந்தால், அந்த நபரின் வாழ்க்கையில் எந்த குறையும் இருக்காது. அவருக்கு அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும், மகிழ்ச்சி மழையாய் பொழியும். அதே சமயம், சனி பகவானின் கோவ பார்வை ஒருவர் மீது பட்டால், அவர் பல வித பிரச்சனைகளை எதிகொள்ள வேண்டி வரக்கூடும்.


இந்த வார சனிக்கிழமை, அதாவது நாளை ஒரு விசேஷமாக நாளாக உள்ளது. இந்த நாளில் சில ராசிக்காரர்களின் பல விருப்பங்கள் கேட்காமலேயே நிறைவேறும். சனிக்கிழமை அதாவது ஆகஸ்ட் 26 அன்று, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மூல நட்சத்திரத்துடன் கூடிய விஷ்கும்ப யோகம் உருவாகும். இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் இருக்கும். எனினும், 5 ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் அளவு கடந்த அருளும் ஆசியும் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


தனுசு ராசி


தனுசு ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமை சிறப்பாக இருக்கும். இந்நாளில் சனிபகவானின் அருளால் தடைபட்ட வேலைகள் எளிதாக நிறைவேறும். பிள்ளைகளின் திருமணத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு இந்த பிரச்சனை நீங்கும். வருமானம் மற்றும் செலவினங்களை சீராக்குவீர்கள். இதன் மூலம் நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் பணி வெற்றியடையும். பழைய முதலீடு நன்மை தரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.பல சிரமங்களிலிருந்து விடுபடலாம். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். 


கன்னி ராசி


கன்னி ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமை மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் சனிபகவானின் அருள் பெறுவார்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்கள் இந்த நாளில் இதை தொடங்கலாம். நாளை தொடங்கும் பணிகள் மிக சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும். சனி பகவானின் அருளால் எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு கிடைக்கும். தடைபட்ட உங்களின் வேலைகள் நிறைவேறும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு மிகவும் ஆதரவாக இருக்கும்.


மேலும் படிக்க | பணம், புகழ் கூடும்: சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கும்


மகர ராசி


மகர ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமை சிறப்பான நாளாக இருக்கும். தடைபட்ட பழைய பணிகள் முடிவடையும். வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் குடும்பத்தின் உதவியால் அது தீரும்.


கும்ப ராசி


கும்ப ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமை நல்ல பலனைத் தரும். குறிப்பாக வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு ஏற்படலாம், இதன் காரணமாக நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவை அனைத்தும் தீர்ந்துவிடும். 


விருச்சிக ராசி


விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமை நல்ல நாளாக இருக்கும். மூல நட்சத்திரம் மற்றும் விஷ்கும்ப யோகத்தால், பணப் பரிவர்த்தனைகளில் லாபம் இருக்கும். அதன் காரணமாக பொருளாதார நிலை நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். பழைய நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்களை சந்திப்பீர்கள்.


மேலும் படிக்க | வக்ரம் ஆனாலும் வரத்தை அளிக்கொடுக்கப்போகும் குரு - இந்த ராசிகளுக்கு மட்டும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ