சுக்கிரன் பெயர்ச்சி 2023: வேத ஜோதிடத்தின் படி, பல வகையான மங்களகரமான ராஜயோகங்கள் கிரகங்களின் பரிமாற்றத்தால் உருவாக்கப்படுகின்றன. அவை பல ராசிகளுக்கு ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கின்றன. பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல் பிப்ரவரி மாதம் நிகழவுள்ள சுக்கிரனின் மாற்றமும் பல ராசிகளில் மாற்றங்களை கொண்டு வரும். சுக்கிரன் மீன ராசியில் நுழைவதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகும். இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, மாளவ்ய ராஜயோகம் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பை அதிகரிக்கும் காரணியாக கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரனின் பெயர்ச்சியால் இந்த ராஜயோகம் உருவாகும் போது, ​​இதன் பலனைப் பெறும் நபர் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவார். இந்த யோகம் உருவாகும் வேளையில், தர்க்கம், வலிமை, தைரியம் போன்றவை அதிகமாகும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 15ல் உருவாகும் இந்த ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


2023-ல் மாளவ்ய ராஜயோகம் இந்த நாளில் உருவாகும்


ஜோதிட சாஸ்திரப்படி 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி மீன ராசியில் சுக்கிரன் பிரவேசிப்பார். இந்த மாற்றம் இரவு 8.12 மணிக்கு நடக்கும். சுக்கிரனின் பெயர்ச்சிக்கு பிறகு இந்த யோகம் உருவாகும்.


மாளவ்ய ராஜயோகம் என்றால் என்ன


ஜோதிடக் கணக்கீடுகளின்படி, பஞ்சமஹாபுருஷ ராஜயோகங்களில் மாளவ்ய ராஜயோகமும் ஒன்றாகும். இந்த யோகம் சுக்கிரனின் கேந்திரத்தால் உருவாகிறது. ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் மற்றும் சந்திரன் முதல் 1, 4, 7 மற்றும் 10 ஆம் வீட்டில் ரிஷபம், துலாம் அல்லது மீனம் ஆகிய இடங்களில் சுக்கிரன் அமைந்திருந்தால், இந்த ராஜயோகம் உருவாகும்.


மேலும் படிக்க | தைப் பொங்கல் மாதத்தில் 8 பெயர்ச்சிகளில் பணம் கொடுக்குமா சனி பெயர்ச்சி? 


2023-ல் சுக்கிரன் மூன்று முறை மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குவார். முதல் ராஜயோகம் பிப்ரவரி 15ஆம் தேதி மீன ராசியிலும், இரண்டாம் ராஜயோகம் ஏப்ரல் 6ஆம் தேதி ரிஷப ராசியிலும், மூன்றாவது நவம்பர் 29ஆம் தேதி துலாம் ராசியிலும் சுக்கிரன் பிரவேசிக்கும்போது மாளவ்ய ராஜயோகம் உருவாகும்.


இந்த ராசிக்காரர்கள் அளப்பரிய பலன்களைப் பெறுவார்கள்


- பிப்ரவரி 15ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் நுழையும் போது மாளவ்ய ராஜயோகம் உருவாகும். 


- இந்த மாளவ்ய ராஜயோகத்தால் மிதுனம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். 


- இவர்களுக்கு திடீர் பண வரவு இருக்கும். 


- நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். 


- பணி இடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும்.


- மேலும் இந்த காலகட்டத்தில் வணிகத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக லாபம் ஈட்டுவார்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ராசி மாறுகிறார் சூரியன்: பொங்கல் முதல் இந்த ராசிகளுக்கு பம்பர் மகிழ்ச்சி, அசுர வளர்ச்சி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ