சனிப்பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சனி பகவானின் ராசி மாற்றங்களும், நிலை மாற்றங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மிகவும் அதிகமாக காணப்படும். ஏப்ரல் 29, 2022 அன்று சனிபகவான் மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்குள் நுழைந்தார். அதன் பிறகு ஜூலை மாதம் சனி மீண்டும் ராசி மாறி மகர ராசிக்கு வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது அடுத்த ஆண்டு, அதாவது 2023ம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மீண்டும் அவர் கும்ப ராசிக்குள் பிரவேசிக்கிறார். சனி பகவான் 29 ஏப்ரல் 2025 வரை இந்த ராசியிலேயே இருப்பார். அதாவது சனிபகவான் கும்ப ராசியில் 26 மாதங்கள் சஞ்சரிப்பார். சனிப்பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், இந்த காலகட்டத்தில், 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இவர்கள் எடுத்துவைக்க வேண்டும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


கும்பம்: 


ஜோதிடத்தின் படி, ஏப்ரல் 29, 2022 அன்று, சனி பகவான் கும்ப ராசியில் நுழைந்தார். அதன் பிறகு அவர் 5 ஜூன் 2022 அன்று வக்ர நிலைக்கு மாறினார். இதையடுத்து ஜூலை 12-ம் தேதி சனி பகவான் கும்ப ராசியிலிருந்து விலகி மகர ராசிக்கு பிரவேசித்தார். இப்போது புத்தாண்டில், ஜனவரி 17, 2023 அன்று, மீண்டும் கும்ப ராசிக்குள் நுழைகிறார். சனி கும்ப ராசியில் நுழைவதால் கும்ப ராசியில் ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் நடக்கிறது. கும்ப ராசிக்காரர்கள் 23 பிப்ரவரி 2028 அன்று எழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை பெறுவார்கள். 


அது வரை கும்ப ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைத்து பணிகளிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறவுகளுடன் பிணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. 


மேலும் படிக்க | டிசம்பரில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள், கேட்டது கிடைக்கும் 


மகரம்: 


ஜோதிட சாஸ்திரப்படி மகர ராசிக்காரர்களுக்கு 2017ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி ஏழரை நாட்டு சனி தொடங்கியது. இவர்களுக்கு சனியின் தாக்கம் மார்ச் 29, 2025 வரை இருக்கும். தற்போது இவர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் நடக்கிறது.


மகர ராசிக்காரர்கள் பணி இடத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். சக ஊழியர்களுடன் மிகுந்த எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. இந்த வாக்குவாதங்கள் பெரிய சண்டைகளுக்கு வழிவகுக்கக்கூடும்.


மீனம்: 


ஏப்ரல் 29, 2022 அன்று சனிபகவான் கும்ப ராசியில் கோச்சாரம் செய்தபோது, மீன ராசியில் ஏழரை நாட்டு சனி தொடங்கியது. ஆனால் சனி மகர ராசியில் பிரவேசித்ததும், மீனத்தில் இருந்து இதன் தாக்கம் விலகியது. அடுத்த ஆண்டு ஜனவரி 17, 2023 அன்று சனி கும்ப ராசியில் மீண்டும் நுழையும்போது, மீன ராசியில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் தொடங்கும். ஏப்ரல் 17, 2030 வரை மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருக்கும். 


மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். சனி பகவானை மகிழ்விப்பதற்கான பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். உடல் நலனில் அதிகபட்ச கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் பொறுமையாக நடந்துகொள்வது தேவையற்ற வாக்குவாதங்களையும் வீண் விவாதங்களையும் தவிர்க்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | யோசிக்காமல் செலவு செய்யும் ராசிகள் இவைதான்: பணத்தை அள்ளி வீசுவார்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ