Jupiter Nakshatra Peyarchi Palangal :  சுக்கிரனின்  ராசியான ரிஷபத்தில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் குரு பகவான், செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிட நட்சத்திரத்திற்கு ஒருசில நாட்களுக்கு முன்னதாக மாறினார். நவகிரகங்களில், தேவ குரு வியாழன் மிகவும் மங்களகரமானவர். கிரகங்கள் அனைத்தும், ராசியை மட்டும் மாற்றுவதில்லை, நட்சத்திரத்தையும் மாற்ற்க் கொண்டே இருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது குரு பகவான், ரிஷப ராசியில் இருக்கிறார், அடுத்த ஆண்டு மே மாதம் மிதுன ராசியில் பெயர்ச்சியாவார். அதே போல, 20 ஆகஸ்ட் 2024 அன்று செவ்வாய் கிரகத்தின் மிருகசீரிட நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியான குரு, 28 நவம்பர் 2024 வரை இந்த நக்ஷத்திரத்தில் இருப்பார். குரு ரிஷப ராசியிலும், மிருகசீரிட நட்சத்திரத்திலும் இருக்கும் காலம் யாருக்கு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.


ஞானத்திற்கும் அதிபதி என்று சொல்லப்படும் குருவின் சக்தி மற்றும் அறிவின் தாக்கத்தால் அருமையான வாழ்க்கையை எதிர்கொள்ளப்போகும் ராசிகள் இவை...


மிதுனம்: ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு, மிதுன ராசியினருக்கு நல்லது செய்வார். குரு பகவானின் சஞ்சாரத்தில் வீடு மனை வாங்கும் யோகம் வரும், நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். ஆனால், சுப செலவுகளும் அதிகரிக்கலாம். எனவே செலவு என்றாலும், அது விரயமானதாக இல்லை என்று மகிழ்ச்சி அடையுங்கள். புதிய தொழிலை தொடங்கவும், திருமணங்களுக்கான செலவுகளை செய்யவும் தயங்க வேண்டாம். 


மேலும் படிக்க | புரட்டாசி பொறந்தா 4 ராசிகளுக்கு குதூகலம்! செப்டம்பர் கிரகப் பெயர்ச்சியால் உங்களுக்கு ஜாக்பாட்??


சிம்மம்: குருவின் பெயர்ச்சி மட்டுமல்ல, குருவின் ரிஷப ராசி, மிருகசீரிட நட்சத்திர இருப்பு, சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பண மழையை பெய்யவிக்கும். வாழ்க்கை துணையுடன் இதுவரை இருந்து பிரச்சனைகள் அனைத்தும் சட்டென்று மாறும். மனதில் மகிழ்ச்சி பொங்கும், வாழ்க்கை இனிமையாக இருக்கும்.


கன்னி:குரு பார்த்தால் கோடி நன்மை என்பது வெறும் வார்த்தை அல்ல என்பதை கன்னி ராசிக்காரர்கள் புரிந்துக் கொள்வார்கள். பொருளாதாரம் உயரும். கன்னி ராசிக்காரர்களுக்கு இனி திரும்பிப் பார்க்கக்கூட நேரம் இருக்காது, மகிழ்ச்சியில் நனைந்து வாழ்க்கையை அனுபவிக்கும் காலம் இது. தடைபட்ட வேலைகள் அனைத்தும் இனி சுலபமாக முடியும். முதலீடு செய்தால் அதில் லாபம் கிடைக்கும். 


கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு குருவின் தற்போதைய இருப்பு, காலகட்டத்தில்,வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கும், மனதில் ஆசுவாசமும் நிம்மதியும் பிறக்கும். பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சியாக வாழும் காலம் வந்து விட்டால் ஆசுவாசம் வராமல் போகுமா என்ன?


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | செப்டம்பர் மாத ராசிபலன்! ஐபோன் 16 வாங்கும் அளவு பணம் வந்து குவியும்! அதிர்ஷ்டக்கார ராசி...


மேலும் படிக்க | ராசியை மாற்றாமலேயே பாடம் கற்றுக் கொடுக்கும் சனீஸ்வரர்! சனி பரிகார தலங்கள் இருக்க கவலை ஏன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ