கிரகங்கள் அனைத்துமே இயங்கிக் கொண்டே இருக்கின்றன. கிரகங்கள் ஒன்பதும், வெவ்வேறு வேகத்தில் இயங்குபவை என்பதால், நவகிரகங்கள் அனைத்தின் பெயர்ச்சி காலம் மாறுபடுகிறது. சனி கிரகம் தான் மிகவும் மந்தமாக இயங்கும் கிரகமாகும். செப்டம்பர் 22 அன்று, புதன் மற்றும் வியாழன் கிரகங்கள் ஒரே நாளில் பெயர்ச்சி அடைகின்றன. ஒரே நாளில் இடத்தை மாற்றும் புதனும், குருவும் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதனும் வியாழனும் ஒரே நாளில் பெயர்ச்சி


செப்டம்பர் 22ம் தேதியன்று பிறருடன் நமது உறவை உறுதிப்படுத்தும் வார்த்தைகளை பேச வைக்கும் அறிவுக்காரகர் புதனும், அதிர்ஷ்டத்தைத் தரும் குரு பகவானும் ராசி மாறுகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் புதனின் நிலை வலுவாக இருந்தால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.


புதனும் குருவும்


அதேபோல, ஜாதகர் குரு பலம் பெற்றவாக இருந்தால் அதிர்ஷடமும் அறிவும் இணைந்து நல்ல வாழ்வைத் தரும். இப்படிப்பட்ட குருவும் புதனும் இணைந்து வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளில் இருந்து விரைவில் நிவாரணம் கொடுப்பார்கள். பிரச்சனைகளை போக்கி நல்வாழ்வை வழங்கும் புதனும் குருவும் ஒரே நாளில் ராசி மாறுவது அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், குறிப்பாக நான்கு ராசிகளுக்கு அபரிதமான பலன்கள் ஏற்படும்.


மேலும் படிக்க | சக்திவேல் தந்த சக்தி! சக்தி வாய்ந்த வேலால் பகையை வேரோடு வேரறுக்கும் முருகன் வழிபாடு!


2024 செப்டம்பர் 22


அடுத்த மாதம், அதாவது செப்டம்பர் மாதம் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, 10:15 மணிக்கு, புதன் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதே ஞாயிறில், மாலை 07:14 மணிக்கு, வியாழன் மிருகசீரிட நட்சத்திரத்திற்கு மாறப் போகிறார். இந்த இரு பெயர்ச்சிகளும், யாருக்கெல்லாம் நன்மையைக் கொடுக்கும்? புதன் மற்றும் வியாழனின் மாற்றத்தால் விசேஷ பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகளில் உங்களுடையதும் உண்டா? தெரிந்து கொள்ளுங்கள்.


செப்டம்பர் பெயர்ச்சியால் குதூகலமாகும் ராசிகள்


மேஷம்


ஜோதிட சாஸ்திரத்தின்படி, புதன் மற்றும் வியாழனின் புரட்டாசி மாத பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைகள் அனைத்தும் நிறைவைத் தரும். செய்யும் வேலைக்கு அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மன அமைதியும் குடும்பத்தில் குதூகலமும் நீடிக்கும். 


மேலும் படிக்க | மனித சதையை உண்ணும் அகோரிகள்! நரமாமிசம் சாப்பிடும் அகோரிகளின் வாழ்க்கைமுறை!


கன்னி  


திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். தடைபட்ட பணிகள் முடிவடையும். வேலையில்லாதவர்களுக்கு இந்த இரு பெயர்ச்சிகளும் வேலைவாய்ப்பைப் பெற்று தரும். கன்னி ராசிக்காரர்கள் செய்யும் முதலீட்டிற்கு இரட்டிப்பு பலன்களை வியாழன் கொடுபபர். திருமணமானவர்களும் காதலர்களும் தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள். செப்டர்பர் மாத புதன் மற்றும் வியாழன் பெயர்ச்சி கன்னி ராசியினருக்கு குதூகலத்தைக் கொடுக்கும்.  


மகரம்


நிலுவையில் உள்ள வேலைகள் விரைவில் முடிவடையும் மகர ராசிக்கார்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பணவரவு கிடைக்கும், குடும்பத்தில் உள்ளவர்களுடனான உறவு மேம்படும்.


மீனம்


தடைபட்ட காரியங்கள் கைகூடும், மீன ராசியினருக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம். அறிவை கூர்மையாக்கும் புதன் என்றால், வியாழன் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார். இந்த இருவரின் பெயர்ச்சியால் மீன ராசியினரின் மனம் அமைதியடையும். குழப்பங்கள் நீங்கி தெளிவடைவார்கள்.


மேலும் படிக்க | ராசியை மாற்றாமலேயே பாடம் கற்றுக் கொடுக்கும் சனீஸ்வரர்! சனி பரிகார தலங்கள் இருக்க கவலை ஏன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ