செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2023: கிரகங்களின் தளபதி என அழைப்படும் செவ்வாய், அதிக ஆற்றல் பெற்ற கிரகமாகவும் காணப்படுகின்றது. அதனால்தான் இந்த கிரகத்தின் மாற்றம், 12 ராசிகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வருகிற ஜூலை 1 ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசியில் பெயர்ச்சியாகப் போகிறது. செவ்வாய் மற்றும் சிம்மம் இரண்டும் நெருப்பு உறுப்புகளாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், சனி பகவான் தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சியடைப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று எதிர் எதிராக இருக்கும். இதனால் சமசப்தம யோகம் உருவாகும். இந்த நிலை ஐந்து ராசிக்காரர்களுக்கு பாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். அந்த ராசிகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழ்க்கையில் சிக்கலை சந்திக்க போகும் ராசிக்காரர்கள் பற்றி பார்ப்போம்


மேஷம்
செவ்வாய் மற்றும் சனியின் இந்த நிலை மேஷ ராசிக்காரர்களுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. இந்த நேரத்தில், உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.


மேலும் படிக்க | குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட், அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்


கடகம்
செவ்வாய் மற்றும் சனி நேருக்கு நேர் வருவது கடக ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். கடக ராசிக்காரர்கள் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். பேச்சில் கசப்பினால் பிரச்சனைகள் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், யாருடனாவது தகராறு ஏற்பட்டால், பின்வாங்குவது நல்லது. தனிப்பட்ட உறவுகள் பாதிக்கப்படலாம். இந்த நேரம் உங்கள் பொறுமையை சோதிக்கும் காலமாக இருக்கும். எனவே பொறுமையை இழக்காதீர்கள்.


கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சமசப்தம யோகம் கெடுதல் செய்யும். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும், இதன் காரணமாக பொருளாதார நிலை மோசமடையலாம். பெரிய முடிவையும் எடுப்பதற்கு முன், அதை நன்றாக யோசித்துப் பிறகு முடிவு எடுக்கவும். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம், எனவே கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஏதாவது டென்ஷன் உங்களைப் பாடாய் படுத்தலாம்.


மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் சனியின் இந்த நிலை சிறப்பாக இருக்காது. அதிகப்படியான செலவுகள் பிரச்சனைகளை உண்டாக்கும். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருங்கள். குடும்பத்தில் அமைதியின்மை ஏற்பட்டு அதன் தாக்கம் பரஸ்பர உறவுகளில் காணப்படும். மக்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகமாகும். வேலையில் தோல்விகள் ஏற்பட்டு மனதில் விரக்தி ஏற்படும்.


மீனம்
செவ்வாய் மற்றும் சனி எதிரே வருவது மீன ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்களைத் தரும். எந்த ஒரு பணியையும் முடிக்க நிறையப் போராட வேண்டியிருக்கும். மீன ராசிக்காரர்களுக்கு தங்கள் இமேஜை கெடுக்கும் எந்த ஒரு வேலையையும் பணியிடத்தில் செய்யாமல் இருப்பது நன்மை தரும். ஈகோவை உங்கள் மனதில் நுழைய விடாதீர்கள். தாய், மகன் இருவரும் அவமானப்படுத்தப் பட்டு பெரிய துன்பத்திற்கு ஆளாகுவார்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | விஷ்ணுவுக்கு வியாழன் அன்று 5 மஞ்சள் பரிகாரங்கள் செய்தால் பணமும் செல்வமும் கூடும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ