Mercury Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இசை, அறிவாற்றல், அறிவுக்கூர்மை, பேச்சாற்றல், கல்வி ஆகியவற்றின் காரணி கிரகமான புதன் பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி அவர் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். மார்ச் 7ஆம் தேதி வரை அவர் இந்த ராசியில் இருப்பார். .கும்பத்தில் இருக்கும் புதனால் தற்போது விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. 


ஜோதிட கணக்கீடுகளின் படி 6, 8, 12 ஆகிய வீடுகளின் அதிபதிகள் இந்த பாவங்களுக்குள்ளேயே அதாவது 6, 8, 12 ஆகிய வீடுகளுக்குள்ளேயே பரிவர்த்தனை செய்யும்போது விபரீத ராஜயோகம் (Vipreet Rajyog) உருவாகிறது. இதன் விளைவாக எதிர்பாராத நேரத்தில் மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். அதாவது ஆண்டியும் அரசனாகவும் யோகம் தான் விபரீத ராஜயோகம். 


தற்போது புதனின் பெயர்ச்சியால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும். இவர்கள் வாழ்க்கையில் அனைத்துவித செல்வங்களையும் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்


கடகம் (Cancer)


கடக ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்சியால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம் மிகவும் லாபகரமானதாக இருக்கும்.  அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். தடைப்பட்டிருந்த காரியங்கள் இப்பொழுது முழுமையாக நிறைவடையும். பல பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும். பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவிற்கான பலவித வழிகள் திறக்கும். மாணவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமானதாக இருக்கும். போட்டி தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் இப்பொழுது வெற்றி காணலாம்.


மேலும் படிக்க | மகாசிவராத்திரியில் உருவாகும் சுபயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், சிவனருள் கிட்டும்


கன்னி (Virgo)


விபரீத ராஜயோகத்தால் உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கன்னி ராசிக்காரர்கள் பல முக்கிய ஒப்பந்தங்களை கைப்பற்றுவார்கள். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். சிக்கல்களில் உங்களுக்கு தீர்வு கிடைக்கும். பண வரவு அதிகமாகும். மேலதிகாரிகள் உங்கள் பணியால் மகிழ்ச்சி அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்


தனுசு (Sagittarius)


விபரீத ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களை அளிக்க உள்ளது. இந்த நேரத்தில் தனுசு ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வெளிநாட்டு பயணத்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நிதிநிலை முன்னேறும். திடீரென்று எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை, லாட்டரி ஆகியவற்றில் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Vijaya Ekadashi 2024: விஜய ஏகாதசி அன்று இந்த பொருட்களை தானம் செய்ய வேண்டாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ