மகர ராசியில் சனிப்பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு நன்மை தீமைகளை அளிக்கும் கிரகம் ஆவார். அனைத்து கிரகங்களைக் காட்டிலும் மிக மெதுவாக இயங்கும் சனி பகவானின் தீவிரம் அனைத்து கிரகங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். நன்மைகளை அளிப்பதிலும் சரி, தீமைகளை வழங்குவதிலும் சரி, சனியை மிஞ்ச யாரும் இல்லை. ஆகையால்தான் நீதிக்கடவுளான சனி, கொடுப்பதிலும் கெடுப்பதிலும் ஒப்பற்றவர் என கூறப்படுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவருடைய ஜாதகத்தில் சனியின் நிலை அசுபமாக இருந்தால், அந்த நபர் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அத்தகையவர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் மிகவும் கடுமையாகவே இருக்கும். அதே சமயம் ஜாதகத்தில் சனியின் நிலை சுபமாக இருந்தால் அந்த நபர்களுக்கு ராஜயோகம்தான்!! அவர்களுக்கு நடக்கும் நன்மைகளை யாராலும் தடுக்க முடியாது.


2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மகர ராசியில் இருந்து வெளியே வந்து, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழையப் போகிறார். சனியின் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் தொடங்கும், சிலருக்கு இது முடிவடையும். ஆனால், அதற்கு முன்னரும் சனி முழு வீரியத்துடன் சில ராசிகளை படுத்துவார். ஜோதிட சாஸ்திரப்படி, 2023 ஜனவரியில் சனி பகவான் ராசி மாறுவதற்கு முன், சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


2022 டிசம்பரில் சனியின் தாக்கத்தால் இந்த ராசிகளுக்கு பிரச்சனை 


ஜோதிட சாஸ்திரப்படி டிசம்பர் மாதம் முழுக்க சனி மகர ராசியில் தனது வழக்கமான இயக்கத்தில் இருப்பார். இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் மீது சனியின் வக்ர பார்வை இருக்கும். மகர ராசியில் சனி இருக்கும் போது இந்த 5 ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கத்தில் இருப்பார்கள். 


இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்


டிசம்பர் மாதத்தில் கும்பம், மகரம், தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருப்பார்கள். மறுபுறம், மிதுனம் மற்றும் துலா ராசியில் சனி தசை இருக்கும். இந்த ஐந்து ராசிக்காரர்கள் டிசம்பர் மாதம் முழுவதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவானுக்கு கோபத்தை உண்டாக்கும் எந்த விஷயத்தையும் இந்த நேரத்தில் செய்யக்கூடாது. 


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சியால் நாளை முதல் பண மழையில் நனையப் போகும் ’4’ ராசி ராசிக்காரர்கள் 


இவற்றை செய்ய வேண்டாம்


குறிப்பாக, ஏழை, ஆதரவற்ற, உழைக்கும் தொழிலாளர்களை அவமதிக்காதீர்கள். வாயில்லா ஜீவன்களான விலங்குகளை சித்திரவதை செய்யாதீர்கள். பொய், ஏமாற்றுதல், நேர்மையின்மை ஆகியவற்றை விட்டுவிடுங்கள். தாழ்த்தப்பட்டவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். விதிகளை புறக்கணிக்காதீர்கள்.


சனியின் கோபத்தைத் தவிர்க்கும் பரிகாரங்கள்


- தவறான பழக்க வழக்கங்களை கைவிடுங்கள். எப்போதும் விதிகளையும் ஒழுக்கத்தையும் பின்பற்றுங்கள். சோம்பேறிகள், தவறான நடத்தை மற்றும் விதிகளை மீறுபவர்களுக்கு சனி கடுமையான தண்டனையை வழங்குகிறார்.


- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்காதீர்கள். அவர்களுக்கு எந்த விதமான தொந்தரவும் கொடுக்காதீர்கள். பெண்களை மதிப்புடன் நடத்துங்கள். 


- அரச மரத்தின் கீழ் தீபம் ஏற்றி வழிபடவும். 


- கருப்பு எள், தோல் காலணிகள், உருளைக்கிழங்கு, கருப்பு ஆடைகள், போர்வை, கம்பளி போன்ற சனி தொடர்பான பொருட்களை தானம் செய்யுங்கள்.


(பொறுப்ப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளவை. ஜீ மீடியா இந்த தலவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சூப்பர் நேரம் தொடங்குகிறது! மேஷத்தில் குரு: குதியாட்டம் போடப்போகும் 5 ராசிகள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ