பித்ரு காரகன் என சூரியன் பெயர் பெற்றிருக்கிறார். இது உண்மை என்றாலும், பகலில் பிறந்தவர்களுக்கே சூரியன் பித்ரு காரகன், இரவில் பிறந்தவர்களுக்கு சனி தான் பித்ரு காரகனாகிறார். நவகிரகங்களில் எதிரும் புதிருமாக உள்ள சூரியனும் சனியும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதால் பலருக்கு பாதகம் என்றால், சிலருக்கு யோகம் உண்டாகிறது. சனி மற்றும் சூரியன் நேருக்கு நேர் பார்க்கும் போது உருவாகும் யோகத்தை சமசப்தக யோகம் என்று அழக்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சம்சப்தக யோகம் பலருக்கு தோஷமாக மாறி கெட்ட நேரமாக அமையும். சனியும் சூரியனும் நேருக்கு நேர் வரும்போதெல்லாம் பெரிய மாற்றம் ஏற்படும். சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு மாறும்போது, சம்சப்தக யோகம் உருவாகவுள்ளது.


கிரகங்கள் மாறும் போதெல்லாம், பல சுப மற்றும் அசுப யோகங்கள், ராஜயோகம் போன்றவை உருவாகின்றன. மெதுவாக நகரும் கிரகமான சனீஸ்வரர், தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் ஆகஸ்ட் 16 அன்று, கிரகங்களின் ராஜாவான சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு மாறுகிறார்.


இந்த இரு கிரகங்களும், தங்களுடைய சொந்த வீட்டில் அமர்ந்திருக்கும்போது, ஒருவரை மற்றொருவர் 180 டிகிரியில் பார்த்துக் கொள்வார்கள். இந்த ஜோதிட நிகழ்வு 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் நிகழ்வாகும். அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு கிரகங்களும் 7 ஆம் வீட்டில் ஒருவரையொருவர் தொடர்புகொள்கின்றனர்.


இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதும், இரு பித்ரு காரக கிரகங்களும் ஏழாம் வீட்டில் தொடர்பு கொள்வதாலும் சமசப்தக யோகம் உருவாகிறது. சனி மற்றும் சூரியனால் உருவாகும் இந்த சமசப்தக யோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனியும் சூரியனும் எதிரும் புதிருமாய் வந்து உருவாகும் சமசப்தக யோகத்தினால் நல்ல பலன்களை அனுபவிக்கும் யோகம் 3 ராசிக்காரர்களுக்கு உருவாகும். 


மேலும் படிக்க | நீர் ராசிக்குள் நுழையும் புதன்! மூளை வெப்பத்தை தணிக்கும் கடகம்! புத்திசாலிகளுக்கு கொண்டாட்டம்! 


இவர்களுக்கு சனியும், சூரியனும் பல நன்மைகளை தருவார்கள். இவர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் விரைவான வளர்ச்சியைப் பெறுவார்கள். சனி மற்றும் சூரியனின் ஆசீர்வாதத்தைப் பெறும் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதைத் தெரிந்து கொள்வோம்.


ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15 சமசப்தக யோகம்


சூரியன் சிம்ம ராசியில் ஒரு மாதம் இருப்பார். எனவே சிம்மத்தில் சூரியன் இருக்கும் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை சம்சப்தக் யோகத்தின் முழு பலன்களையும் 3 ராசிக்காரர்களும் அனுபவிப்பார்கள். அந்த மூன்று அதிர்ஷ்ட ராசிகளைத் தெரிந்துக் கொள்வோம்.


ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சமசப்தக யோகம் மிகவும் சாதகமான பலன்களைக் கொடுக்கும். வருமானத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பணம் வருவதற்கான புதிய பாதைகள் திறக்கும். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். நல்ல லாபத்தைக் கொடுக்கும் சமசப்தக யோகம், உங்கள் வாழ்க்கையின் பொன்னான காலமாக இருக்கும். பெயரும் புகழும் அடைவீர்கள்.  


மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சம்சப்த யோகம் நல்ல பலன்களைத் தரும். ஆவலுடன் காத்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். தடைபட்ட வேலைகள் கூட எளிதாக நடக்கும். உங்கள் பேச்சில் நயம் அதிகரிக்கும். நிதி ஆதாயங்கள் புதிதாக உருவாகும். உங்கள் ஆளுமையை மேம்படுத்தும் சமசப்தக யோகம், பதவி உயர்வையும் கொடுக்கும்.


கும்பம்: தனது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கும் சனி சூரியனின் ஸ்தானத்தால் சமசப்த ஸ்தானத்தில் இருப்பதால் ஏற்படுத்தும் சமசப்த யோகம், கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல காலத்தைக் கொடுக்கும். செல்வமும், சொத்தும் சேரும் காலம் இது. புதிய தொடர்புகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.


மேலும் படிக்க | சிம்மத்தில் வக்ரமாகும் புதன்! 12இல் 5 ராசிகளுக்கு கெடுபலன்களைக் கொடுக்கும் புத்திகாரகர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ