சுக்கிரன் உதயம் 2024: ஜோதிடக் கணக்கீடுகளின்படி, செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தருபவரான சுக்கிரன், மிதுன ராசியில் விரைவில் உதயமாக இருக்கிறார். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இது சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும். செல்வத்தைத் தரும் சுக்கிரன் சுமார் 66 நாட்களுக்குப் பிறகு, ஜூன் 29, 2024 சனிக்கிழமை இரவு 07:52 மணிக்கு உதயமாகப் போகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி, சுக்கிரன் ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆன நிலையில், சுக்கிரன் உதயமாவதால் சுப பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும். உதயமாகும் கிரகமான சுக்கிரன் சில ராசிகளுக்கு மிகவும் சுப பலன்களைத் தருவார். ஆனால் சில ராசிக்காரர்களின் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். சுக்கிரனுக்குப் பிறகு எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.


மிதுனம்: ஜூன் 29-ம் தேதி மிதுன ராசியில் சுக்கிரன் உச்ச நிலையில் இருக்கிறார். இதனால் மிதுன ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலையில் தடைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் பாதிக்கபப்டலாம். திருமணம் கை கூடும் விஷயத்தில் தாமதம் ஏற்படலாம். பொருளாதார விஷயங்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பணம் சம்பாதிக்கும் வழியில் தடைகள் ஏற்படும். வீட்டில் அமைதியின்மை ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் இருப்பதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மனதில் குழப்பம் இருக்கலாம்.


மேலும் படிக்க | மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...


கடகம்: சுக்கிரன் உதயமாவதால், கடக ராசிக்காரர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், நீங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கோபத்தைத் தவிர்க்கவும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வாழ்க்கைத் துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நிதி விஷயங்களில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இதனால் உங்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். அது காதல், தொழில் அல்லது பணம் தொடர்பான விஷயமாக இருக்கலாம். எந்த முடிவையும் மிகவும் யோசித்து எடுங்கள்.


கன்னி: சுக்கிரன் உதயமாவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். எந்த வேலையிலும் ஆர்வம் குறைவாக இருக்கும். எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். திருமண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் மனைவியுடன் கருத்தியல் வேறுபாடுகள் சாத்தியமாகும். உறவுகளில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உங்கள் பேச்சில் கட்டுப்பாடு அவசியம். யோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். இதனால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தோஷமோ யோகமோ? சந்திரனோடு சேர்ந்த சனி குடும்ப வாழ்க்கையில் கும்மியடிச்சிடுவார்! கவனம்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ