சனி அஸ்தமனம் 2023, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் அதன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசி மற்றும் நிலைகளை மாற்றுகின்றன. சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க இரண்டரை ஆண்டு காலம் ஆகும். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, சனி பகவான் ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசியில் பிரவேசித்தார். அதன்பின்னர், சனி, ஜனவரி 31ஆம் தேதி தனது சொந்த ராசியில் அஸ்தமித்தார். இதைத் தொடர்ந்து மார்ச் 6 ஆம் தேதி அவர் மீண்டும் உதயமாவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக கிரகங்களின் அஸ்தமனம் அசுபமாக கருதப்படுகிறது. சனியின் அஸ்தமன நிலையும், சில ராசிக்காரர்களுக்கு பல வித பிரச்சனைகளை கொண்டு வரும். இவர்களுக்கு மார்ச் 6 ஆம் தெதி வரையிலான காலம் மிகவும் வேதனையாக இருக்கப் போகிறது. அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேஷம்


ஜோதிட சாஸ்திரத்தின்படி, மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 11வது வீட்டில் சனி பகவான் அஸ்தமமாகியுள்ளார். இது தொழில் மற்றும் கல்வியின் ஸ்தானமாக கருதப்படுகிறது. சனியின் அஸ்தமன நிலையால், மேஷ ராசிக்காரர்களின் தொழில், கல்வியில் தெளிவான பாதிப்பு ஏற்படும். இதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். அத்தகைய சூழ்நிலையில், எங்கும் பணத்தை முதலீடு செய்வதற்கு முன் கவனமாக இருங்கள். எந்த ஒரு வேலையையும் சனியின் உதயம் வரும்வரை காத்திருந்து செய்வது நல்லது. 


மேலும் படிக்க | வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு-சாண்டள தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்..!!


ரிஷபம்


கும்ப ராசியில் சனி அஸ்தமனமாகியுள்ளதால், ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சனியின் அஸ்தமனம் பெற்றோரின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதுமட்டுமின்றி இந்தக் காலத்தில் கடின உழைப்புடன் எந்த வேலை செய்தாலும் அதற்கு முழு பலன் கிடைக்கும்.


மிதுனம்


ஜோதிடத்தின் படி, சனி பகவான் மிதுன ராசியின் அதிபதியாகக் கருதப்படுகிறார். இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் சனி அஸ்தமனமாகியுள்ளது. ஆகையால், இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்காது. சில சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும். கெட்ட செய்தி வரும்போது மனம் தளர்ந்து போகும். இந்த காலகட்டத்தில் எந்த வகையான நோய்களையும் புறக்கணிக்காதீர்கள்.


துலாம்


துலாம் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சனி அஸ்தமனமாகியுள்ளது. இது கல்வி, காதல் உறவு, சந்ததி ஆகியவற்றின் ஸ்தானமாக கருதப்படுகின்றது. சனியின் அஸ்தமன காலத்தில் துலாம் ராசிக்காரர்கள் கடினமான காலங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குழந்தைகளைப் பொறுத்தவரை நேரம் கடினமாக இருக்கும். உடல்நலம் மற்றும் நடத்தையில் பிரச்சனைகள் காணப்படும். இது தவிர, கர்ப்பிணிப் பெண்களும் இந்த காலகட்டத்தில் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பதற்றம் மற்றும் எதிர்மறை ஆற்றல் வளரும். அத்தகைய சூழ்நிலையில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் - குருவின் அபூர்வ சங்கமம்..! மூன்று ராசிகளுக்கு ஜாக்பாட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ