Tamil New Year: சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் யாருக்கு எப்படி இருக்கும்?

Tamil New Year Sobakiruthu: தமிழ் புத்தாண்டு சோபகிருது ஏப்ரல் 14ம் தேதியன்று உதயமாகவிருக்கிறது. அன்று சூரிய பெயர்ச்சியும் நடைபெறவிருக்கிறது. தமிழ் புத்தாண்டின் சூரிய பெயர்ச்சியானது பலவித சிறப்புக்களைக் கொண்டுள்ளது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 9, 2023, 06:46 PM IST
  • தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 6 ராசிகளுக்கு ஜாக்பாட்
  • மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல காலம் பிறக்குது
  • சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள்
Tamil New Year: சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் யாருக்கு எப்படி இருக்கும்?  title=

தமிழ் புத்தாண்டு சோபகிருது ஏப்ரல் 14ம் தேதியன்று உதயமாகவிருக்கிறது. அன்று சூரிய பெயர்ச்சியும் நடைபெறவிருக்கிறது. தமிழ் புத்தாண்டின் சூரிய பெயர்ச்சியானது பலவித சிறப்புக்களைக் கொண்டுள்ளது... சோபகிருது ஆண்டின் முதல் நாள் முதல் பல ராசிகளுக்கும் பல்வேறுவிதமான அதிர்ஷ்டங்கள் தொடங்கும் என்றாலும், சில ராசிகளுக்கு சூப்பர் ஜாக்பாட் அடிக்கப் போகிறது. அவை எந்த ராசிகள்? தெரிந்துக் கொள்வோம்.

சோபகிருது ஆண்டு ராசிபலன்

மேஷ ராசி 
மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் பகவான், ஏப்ரல் 22க்குப் பிறகு குரு பெயர்ச்சி செய்வது சுப பலன்களைத் தரும், ஆனால் சில காலம் குரு சண்டாள தோஷத்தின் தாக்கத்தையும் தாண்டி அதி சுபமான பலன்களைத் தரும்.  

ரிஷப ராசி 
தமிழ் புத்தாண்டின் தாக்கமானது ஆங்கில ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மிகவும் சிறப்பாக இருக்கும் மற்றும் உங்களின் அனைத்துத் திறமைகளும் வளரும். சமயப் பணிகளில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.

மிதுன ராசி 
சோபகிருது ஆண்டில், அக்டோபர் மாதம் ராசி அதிபதியான புதனால் சில சிறப்பான அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். அக்டோபர் 30-ம் தேதி ராகு பத்தாம் வீட்டில் பெயர்வதால், நிதி நிலை வலுவாகும்.

மேலும் படிக்க | மேஷத்தில் குரு பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு பம்பர் ஜாக்பாட் லாபம்

கடக ராசி 
சோபகிருது ஆண்டில், ராகு பத்தாம் வீட்டை விட்டு வெளியேறி உங்களின் ஒன்பதாம் வீட்டிற்கு அக்டோபர் 30 ஆம் தேதி சென்ற பிறகு, இந்த ஆண்டு சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்யும் ஆண்டாக உங்களால் என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு இருக்கும். வாய்ப்புகள் உள்ளன. படிப்பைத் தவறவிட்டால், இந்த ஆண்டு மீண்டும் தொடங்கலாம்.

சிம்ம ராசி 
திடீரென்று செல்வத்தைப் பெறுவீர்கள், மூதாதையர் சொத்து கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் எந்தவொரு பெரிய வேலையிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். அக்டோபர் 30 ஆம் தேதி எட்டாம் வீட்டில் ராகு வரும்போது ​​​​குரு மட்டும் ஒன்பதாம் வீட்டில் இருக்கும்போது புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு இருக்கும்.

கன்னி ராசி 
மாணவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். அக்டோபர் 30-ம் தேதி ஏழாம் வீட்டில் உங்கள் எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் ராகு உங்கள் வாழ்க்கைத் துணையை சற்று அலைக்கழிப்பதோடு அவர்களின் உடல்நிலையில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

மேலும் படிக்க | நல்ல காலம் பொறந்தாச்சு! 5 ராசிக்காரர்களில் வாழ்வு அமோகம்!

துலாம் ராசி 
வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆனால் ராகுவுடன் குரு இணைவதால், அக்டோபர் மாதத்திற்குப் பிறகு அவதூறு மற்றும் நிதி இழப்பு ஏற்படலம். ஆனால், சில நாட்கள் பொறுமையாக இருந்தால், உங்கள் எதிரிகளை வெற்றி கொள்ளலாம்.

விருச்சிக ராசி 
ஏப்ரல் 22 அன்று, குரு பகவான் உங்கள் ஆறாவது வீட்டில் ராகு மற்றும் சூரியனுடன் இணைகிறார். இந்த நேரத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் தீரும். வெளியூர் பயண வாய்ப்புகளும் உண்டாகும்.

தனுசு ராசி 
குரு பகவான் ஐந்தாம் வீட்டில் ராகுவுடன் வந்து குரு-சந்தோஷ தோஷத்தை உண்டாக்குவார். இந்த நேரத்தில், உங்கள் காதல் உறவில் நீங்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் இல்லையெனில் உங்கள் காதல் உறவும் பாதிக்கப்படலாம்.  

மேலும் படிக்க | Sun Transit: மாசி மாத ராசிபலன்கள்! மேஷத்திற்கு மகுடம் சூட்டும் கும்ப ராசியில் சூரிய சஞ்சாரம்!

மகர ராசி 
ஏப்ரல் 6 முதல் மே 2 வரை சுக்கிரன் உங்கள் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகளுக்கு முன்னேற்றத்தையும் தருவார். சனி பெயர்ச்சியால் உடல் ரீதியாக சில பிரச்சனைகள் வரலாம் உங்கள் தன்னம்பிக்கை குறையலாம் இருப்பினும் பிற கிரகங்களால் வெற்றியை தொடர்ந்து பெறுவீர்கள்.  

கும்ப ராசி 
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். செலவுகள் குறையும் மற்றும் நிதி நிலை வலுவாக இருக்கும். அக்டோபர் 30க்குப் பிறகு ஆண்டின் கடைசி நாட்களில் ராகு இரண்டாம் வீட்டில் பெயர்ச்சி செய்வதால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.

மீன ராசி 
அக்டோபர் 30-ம் தேதி ராகு இரண்டாம் வீட்டில் இருந்து விலகி உங்கள் ராசிக்குள் நுழையும் போது குரு மட்டும் இரண்டாம் வீட்டில் இருக்கும் போது பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் உடல் பிரச்சனைகளும் குறையும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்! இந்த 4 ராசிக்கார்கள் ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News