500-வது டெஸ்ட் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் தொடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மிகவும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விஜய் 65 ரன்கள், புஜாரா 62 ரன்கள் எடுத்தனர்.


நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட் மற்றும் வாங்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.